சிங்கபெருமாள்கோவில் தொடருந்து நிலையம்
சிங்கபெருமாள்கோவில் தொடருந்து நிலையம் (Singaperumal Koil railway station, நிலையக் குறியீடு:SKL) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை–செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தொடருந்து நிலையம் ஆகும். இது சென்னையின் புறநகர்ப் பகுதியான சிங்கபெருமாள்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு சேவை செய்கிறது. இது சென்னைக் கடற்கரை சந்திப்பிலிருந்து 51 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் சிங்கபெருமாள்கோவிலில் தேசிய நெடுஞ்சாலை - 45 இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 45மீ உயரத்தில் உள்ளது. வரலாறுதாம்பரம்–செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையத்தில் உள்ள வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[1] சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia