பரனூர் தொடருந்து நிலையம்
பரனூர் தொடருந்து நிலையம் (Paranur Koil railway station, நிலையக் குறியீடு:PWU) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை புறநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தொடருந்து நிலையம் ஆகும். இது சென்னையின் புறநகர்ப் பகுதியான பரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு சேவை செய்கிறது. இது சென்னைக் கடற்கரை சந்திப்பிலிருந்து 55 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் காட்டாங்குளத்தூரில் தேசிய நெடுஞ்சாலை - 45 இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 42மீ உயரத்தில் உள்ளது. வரலாறுதாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையத்தில் உள்ள வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[1] நிலையம்மகேந்திரா உலக நகரம் இந்த நிலையத்தை 15 மில்லியன் செலவில் உருவாக்கியது. இது நிலையத்தையும் பராமரிக்கிறது. இந்த திட்டத்தில் பயணச்சீட்டு கொடுக்கும் இடம், காத்திருப்பு அறை மற்றும் கழிப்பறைகள், நீரூற்றுகள், நடைமேடைகள், மேம்பாலங்கள் மற்றும் நிலையத்தைச் சுற்றியுள்ள தடங்கள் ஆகியவற்றை பராமரித்தல் மற்றும் முக்கிய கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.[2] போக்குவரத்துஇந்த நிலையம் ஒவ்வொரு நாளும் சுமார் 20,000 பயணிகளை கையாளுகிறது. மகேந்திரா உலக நகரப் பணியாளர்களில் சுமார் 40 சதவீதம் பேர் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.[2] சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia