சேத்துப்பட்டு தொடருந்து நிலையம்
சேத்துப்பட்டு தொடருந்து நிலையம் (Chetpet railway station, நிலையக் குறியீடு:MSC) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது சென்னைக் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தின் இடையே அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம் சென்னையின் புறநகர்ப் பகுதியான சேத்துப்பட்டு நகரின் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் அருகிலேயே சேத்துப்பட்டு ஏரி அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 9 மீட்டர் உயரத்தில் உள்ளது. வரலாறுஇந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் இரயில் சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1] சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia