பெருங்களத்தூர் தொடருந்து நிலையம்
பெருங்களத்தூர் தொடருந்து நிலையம் (Perungalathur railway station, நிலையக் குறியீடு:PRGL) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்கரணை பகுதியில் உள்ள மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இது சென்னைக் கடற்கரையிலிருந்து சுமார் 32 கி.மீ. (20 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இது கடல் மட்டத்திலிருந்து 26 மீ (85 அடி) உயரத்தில் உள்ளது. வரலாறுதாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையத்தில் உள்ள வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[1] போக்குவரத்து2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, 84 இரயில்கள் இந்நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன, மேலும் சுமார் 10,000 பயணிகள் இந்த நிலையத்தை தினமும் பயன்படுத்துகின்றனர்.[2] அமைவிடம்இது பெருங்களத்தூரில், தேசிய நெடுஞ்சாலை - 45 இல் அமைந்துள்ளது. பொதுவாக பெருங்களத்தூரில் தான் சென்னைக் கோயம்பேடு செல்லும் சாலையும், தாம்பரம், மீனம்பாக்கம், கிண்டி போன்ற சென்னை நகரப் பகுதிக்கு செல்லும் சாலையும் பிரிகிறது. பெரும்பாலான பேருந்துகள் கோயம்பேடு செல்வதால், சென்னை நகரப் பகுதிக்கு செல்வோர் பெருங்களத்தூரில் இறங்கி, புறநகர் இரயிலில் செல்வதால், இந்நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. விபத்து2012 நிலவரப்படி, இந்நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக குறைந்தது ஐந்து பேர் தொடருந்து விபத்தால் இறக்கின்றனர்.[2] சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia