செரி உக்கிரசேனன்செரி உக்கிரசேனன் (ஆங்கிலம்; இந்தோனேசியம்: Sri Ugrasena; என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழியில், இரண்டாம் அரசர் ஆவார். இவர் சக ஆண்டு: 837-864 அல்லது 915-942-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆட்சி செய்தார்.[1][2] அவரின் அப்போதைய இராச்சியத்தின் தலைநகரம் சிங்கமண்டவா (Singhamandawa) என அறியப்படுகிறது.[1] இவர் தம்முடைய மக்களின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பல கல்வெட்டுகளை வெளியிட்டார். அவற்றில் அரச நன்கொடை வழங்குதல், வரி ஒழுங்குமுறை, மத விழாக்கள் மற்றும் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கான பொது விடுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் கட்டுதல் ஆகியவை அடங்கும்.[1][2] இவரின் ஆட்சிக்காலம் கிழக்கு ஜாவாவில் ஈசான அரச மரபு வழி (Isyana dynasty) மன்னர் சிந்தோக்கின் (Mpu Sindok) ஆட்சிக் காலத்தை ஒட்டி உள்ளது.[1] கல்வெட்டுகள்பாலி இராச்சியம் தொடர்பான ஒன்பது கல்வெட்டுகளில் இவரின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]
அனைத்துக் கல்வெட்டுகளும் பாலினிய பழைய மொழியில் எழுதப்பட்டுள்ளன.[3][2][3][4] இறப்புஅரசர் செரி உக்கிரசேனன், ஆயர் மடம் (Air Madatu) என்ற கோயிலில் அடக்கம் செய்யப்பட்டார். இதைப் பற்றி, அவருக்குப் பின் ஆட்சி செய்த மன்னர் தவநேந்திர வருமதேவன் வெளியிட்ட கல்வெட்டு கூறுகிறது.[1] மேலும் காண்கமேற்கோள்கள்
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia