தவநேந்திர வருமதேவன்

தவநேந்திர வருமதேவன் (ஆங்கிலம்: Tabanendra Warmadewa; இந்தோனேசியம்: Sang Ratu Aji Tabanendra Warmadewa; என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழியில், மூன்றாம் அரசர் ஆவார்.[1] இவர் சக ஆண்டு: 877-889 அல்லது 955-967-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஆட்சி செய்தார்.

பாலி, மாணிக் லியூ கிராமத்தில் (Manik Liu village) கிடைக்கப் பெற்ற மூன்று கல்வெட்டுகளில் அவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] பல கிராமங்களுக்கு வரி விலக்கு அளித்ததற்காகவும்; அர்ச்சகர்கள் சிலர், ஆயர் மடத்தில் தங்களின் தங்குமிடத்தைக் கட்ட அனுமதித்ததற்காகவும்; அந்தக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார். ஆயர் மடம் (Air Madatu) என்பது இவருக்கும் முந்தைய மன்னர் செரி உக்கிரசேனன் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும்.[3]

பாலி கிந்தாமணி கிராமப் பகுதியில் (Kintamani village) இரண்டாவது கல்வெட்டு கிடைத்துள்ளது. இவரின் மனைவியின் பெயர் செரி சுபத்திரிகா தருமதேவி (Sri Subhadrika Dharmadewi).[2][4]

கல்வெட்டுகள்

பாலி இராச்சியம் தொடர்பான மூன்று கல்வெட்டுகளில் தவநேந்திர வருமதேவனின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.[5]

  • மாணிக் லியூ கல்வெட்டு 1 - (Manik Liu inscription) (சக ஆண்டு: 877)
  • கிந்தாமணி கல்வெட்டு 1 - (Kintamani inscription 1) (சக ஆண்டு: 889)
  • கிந்தாமணி கல்வெட்டு 2 - (Kintamani inscription 2) (சக ஆண்டு: 889)

அனைத்துக் கல்வெட்டுகளும் பாலினிய பழைய மொழியில் எழுதப்பட்டுள்ளன.[6][5][6][7]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Tugiyono KS (2004). Sejarah. Grasindo. p. 64. ISBN 9789797325305.
  2. 2.0 2.1 Shastri, Narendra Dev Pandit (1963-01-26). Sejarah Bali Dwipa. Bhuvana Saraswati. p. 38-40.
  3. Mustopo, M. Habib (2005). Sejarah: Untuk kelas 2 SMA. Yudhistira. p. 36. ISBN 9789796767076.
  4. Wikarman, I. Nyoman Singgin (1997). Bangli tempo doeloe. Yayasan Wikarman. p. 1.
  5. 5.0 5.1 Setiawan 2008, ப. 219.
  6. 6.0 6.1 Shastri 1963, ப. 26.
  7. Poesponegoro & Notosusanto 2008, ப. 343.

சான்றுகள்

முன்னர் பாலி அரசர்கள்
தவநேந்திர வருமதேவன்
955-967
பின்னர்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya