சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லத்தான் நினைக்கிறேன் (Sollathaan Ninaikkiren) என்பது 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஸ்ரீவித்யா, ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாடல்களை கவிஞர் வாலி எழுதினார். இப்படத்தில் இடம்பெறும் சொல்லத்தான் நினைக்கிறேன், உள்ளத்தால் துடிக்கிறேன் என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இத்திரைப்படமானது மணியன் எழுதிய இலவு காத்த கிளி என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.[1][2][3] நடிப்பு
பாடல்கள்எம். எஸ். விஸ்வநாதனால் பாடல், இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கவிஞர் வாலியால் எழுதப்பட்டது.
விமர்சனம்இந்து தமிழ் நாளிதழில் வந்த விமர்சனமானது - 'இப்படத்தில் மூன்று நாயகிகள் என்றாலும் ஜெயசித்ராவின் பாத்திர வார்ப்பும் அவரின் அலட்சியமான சவால் விடுகிற மேனரிஸப் பேச்சும் ரொம்பவே கொள்ளைகொண்டன. கமலும் ஜெயசித்ராவும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்தார்கள்'.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia