தக்மாக் கோட்டை
தக்மாக் கோட்டை (Takmak fort) மகாராட்டிராவின் பால்கர் மாவட்டத்தின் பால்கர் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டை செங்குத்தான உயரத்தில் முடிவடையும் வடக்கு-தெற்கு மலை உச்சியில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டை பாழடைந்த நிலையில் உள்ளது. சில கோட்டைகளின் எச்சங்கள் இன்றும் உள்ளன. இது மும்பை நகரத்திலிருந்து 60 கி. மீ. (37 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஒரு கோட்டை ஆகும். சில காலம், இந்த கோட்டை போத்துக்கீசர்களின் வசம் இருந்தது. 1739-இல் வசாய் போருக்குப் பிறகு இது மராட்டியப் படைகளால் கைப்பற்றப்பட்டது. இது 1817ஆம் ஆண்டில் பிரித்தானியத் தரைப்படையினால் கைப்பற்றப்பட்டது.[2] அணுகல்இந்தக் கோட்டை அனைத்து பருவங்களிலும் அணுகக்கூடியது. அடிவார கிராமமான சக்வாரிலிருந்து கோட்டை நுழைவாயிலை அடைய சுமார் மூன்று மணி நேரம் ஆகும். தேசிய நெடுஞ்சாலை 48-இல் அமைந்துள்ள இராமகிருஷ்ணா மடத்திலிருந்து மலையேற்றப் பாதை தொடங்குகிறது. மலையேற்றப் பாதை செங்குத்தான இடமான வடக்கே செல்லும் குறுகிய பள்ளத்தாக்கின் வழியாகச் செல்கிறது. இங்கு இது செங்குத்தாக உள்ளது. கோட்டை முழுவதையும் பார்வையிடச் சராசரியாக 30 நிமிடங்கள் ஆகும். பார்க்க வேண்டிய இடங்கள்நல்ல நிலையில் ஒரு தெறுவேயம் உள்ளது. இருப்பினும் மீதமுள்ள கோட்டை பாழடைந்துள்ளது. பாறையில் வெட்டப்பட்ட கோட்டை, கட்டிடங்களின் எச்சங்கள் உள்ளன.[1] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia