தமிழ்நாட்டின் எட்டாவது சட்டமன்றத் தேர்தல் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, ம. கோ. இராமச்சந்திரன் மூன்றாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார். 1987 இல் இறக்கும்வரை அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார்.[1]
தொகுதிகள்
1984 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]
கட்சிகள்
1977 முதல் எட்டாண்டுகள் தமிழகத்தை ஆண்டு வந்த அதிமுகவுடன் இந்திரா காங்கிரசும் காந்தி காமராஜ் காங்கிரசும் கூட்டணி அமைத்து இத்தேர்தலில் போட்டியிட்டன. திமுக தலைமையில் அமைந்த எதிர்க்கட்சி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர அம்பேத்கார் க்ராந்தி தளம், பாரதீய ஜனதா கட்சி, காங்கிரசு (ஜே), தமிழ் நாடு காங்கிரசு போன்ற கட்சிகளும் இத்தேர்தலில் போட்டியிட்டன.[3][4]
அரசியல் நிலவரம்
- 1980 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திரா காங்கிரசு இம்முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. 1984 அக்டோபர் மாதம் அன்றைய இந்திய பிரதமரான, இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதால் எழுந்த அனுதாப அலையும், சிறுநீரகக் கோளாறு காரணமாக ஏற்பட்ட உடல் நல குறைவால் எம்ஜியாருக்கு ஆதரவாக எழுந்த அனுதாப அலையும், இக்கூட்டணியை பலம் பெறச் செய்தன. 1983 இல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மேலவை உறுப்பினராகி இருந்த திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்கள் அன்னை இந்திராகாந்தியின் எதிர்பாராத மரணம் எதிர்கட்சி தலைவரும் தனது ஆருயிர் நண்பருமான எம். ஜி. ஆர் அவர்களின் உடல் நல குறைவால் அமெரிக்காவில் பெரும் சிகிச்சையில் இருந்ததால். அந்த இரண்டு துயர சம்பவங்களால் எதிர்கட்சி தலைவரான கருணாநிதி அவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
- திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜனதா கட்சியும் இடம் பெற்றிருந்தன. எம்ஜியார் அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை அவரது அமைச்சர்களில் ஒருவரான இராம. வீரப்பன் திட்டமிட்டு நடத்தினார். அதிமுக பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக எம்ஜியார் மருத்துவமனையின் சிகிச்சை பெறும் காட்சிகள் தமிழ்நாட்டு திரையரங்குகளில் திரையிடப்படடன. இத்தேர்தலின் போதே ”எம்.ஜி.ஆர் ஃபார்முலா” என்றழைக்கப்படும் கூட்டணி உடன்பாட்டு முறை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. இதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிக்கு (காங்கிரசு) 70 % இடங்களும், மாநிலக் கட்சிக்கு (அதிமுக) 30% இடங்களும் ஒதுக்கப்பட்டன. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 30% இடங்களும், அதிமுகவுக்கு 70% இடங்களும் ஒதுக்கப்பட்டன.[3][4]
தேர்தல் முடிவுகள்
தேர்தல் தேதி – 24 டிசம்பர் 1984; மொத்தம் 73.47 % வாக்குகள் பதிவாகின.[5]
கூட்டணி
|
கட்சி
|
வாக்குகள்
|
வாக்கு %
|
போட்டியிட்ட இடங்கள்
|
வென்ற இடங்கள்
|
மாற்றம்
|
அதிமுக இடங்கள்: 195 மாற்றம்: +29 வாக்குகள்: 11,681,221 வாக்கு %: 53.87%
|
அதிமுக
|
8,030,809
|
37.03%
|
155
|
132
|
+3
|
காங்கிரசு
|
3,529,708
|
16.28%
|
73
|
61
|
+30
|
காந்தி காமராஜ் காங்கிரசு
|
120,704
|
0.56%
|
4
|
2
|
-4
|
திமுக இடங்கள்: 34 மாற்றம்: -23 வாக்குகள்: 8,021,293 வாக்கு %: 37.00%
|
திமுக
|
6,362,770
|
29.34%
|
167
|
24
|
-13
|
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
|
597,622
|
2.76%
|
16
|
5
|
-6
|
ஜனதா கட்சி
|
493,374
|
2.28%
|
16
|
3
|
+3
|
இந்திய கம்யூனிஸ்ட்
|
567,527
|
2.62%
|
17
|
2
|
-7
|
மற்றவர்கள் இடங்கள்: 3 மாற்றம்: -8
|
சுயேட்சைகள்
|
1,619,921
|
7.47%
|
994
|
4
|
-4
|
அம்பேத்கர் கிரந்தி தளம்
|
47,212
|
0.22%
|
1
|
1
|
—
|
தமிழ்நாடு காங்கிரசு (கே)
|
152,315
|
0.70%
|
5
|
0
|
—
|
காங்கிரசு (ஜெ)
|
110,121
|
0.51%
|
36
|
0
|
—
|
பாரதீய ஜனதா கட்சி
|
54,390
|
0.25%
|
15
|
0
|
—
|
மொத்தம்
|
11 கட்சிகள்
|
21,686,473
|
100%
|
—
|
234
|
—
|
ஆட்சி அமைப்பு
அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எம். ஜி. இராமச்சந்திரன் மீண்டும் தமிழகத்தின் முதல்வரானார். 1987 வரை அவரே தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்பு
1984 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்