தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977
தொகுதிகள்1977 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1] கட்சிகள்1967 ஆம் ஆண்டு முதல் முறையாக திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாத்துரை இரண்டாடுகளுக்குள் 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவில் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். 1971 தேர்தலில் மீண்டும் திமுக வென்று கருணாநிதி இரண்டாம் முறை முதல்வரானார். 1972 இல் திமுக பிளவு பட்டது. எம். ஜி. ஆர் கட்சியைவிட்டு வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதுகட்சியைத் தொடங்கினார். 1976 இல் காமராஜர் மறைவிற்குப் பின் அவரது நிறுவன காங்கிரசு நிலை குலைந்தது. ஜி. கே. மூப்பனார் தலைமையில் ஒரு பிரிவினர் இந்திரா காங்கிரசுடன் இணைந்தனர். மற்றொரு பிரிவினர் ஜனதா கட்சியில் இணைந்தனர். காமராஜர் உயிருடன் இருந்த வரை தமிழகத்தில் காலூன்ற முடியாத இந்திரா காங்கிரசு அவரது மறைவுக்குப் பின்னர் வலுவடைந்தது. 1972 இல் ராஜகோபாலாச்சாரி இறந்த பிறகு அவரது சுதந்திராக் கட்சியும் செயல்படுவது நின்று போனது. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வார்ட் ப்ளாக் போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.[2][3][4][5][6][7] அரசியல் நிலவரம்
தேர்தல் முடிவுகள்தேர்தல் தேதி – 10 ஜூன் 1977 ; மொத்தம் 61.58 % வாக்குகள் பதிவாகின.[9]
ஆட்சி அமைப்புஅதிமுக தனிப்பெரும்பான்மையுடன் முதல் முதலில் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் எம். ஜி. ஆர் முதலாவது முறை தமிழகத்தின் முதல்வரானார். ஆனால் எதிர்கட்சியான திமுக கட்சியின் தலைவர் கருணாநிதி அவர்கள் எம். ஜி. ஆர் அன்னிய பிறப்பு இலங்கையர் முதலமைச்சர் பதவியில் நாடாள முடியாது என்று வழக்கு தொடுத்தார். ஆனால் நீதிமன்ற தீர்ப்பில் இந்தியா சுதந்திரத்திற்க்கு முன்பு இலங்கை தனிநாடாக அங்கிகரிக்கபடவில்லை. அதனால் எம். ஜி. ஆர் அன்னிய பிறப்பில்லை என்று கூறி முதல்வர் பதவியுடன் நாடாள முடியும் என்று தீர்ப்பு வழங்கபட்டு அந்த நீதி போரட்டத்திலும் வெற்றி பெற்று தான் ஒரு நீதிக்கட்சியின் வழி வந்த தலைவர் என்று எம். ஜி. ஆர் நிருபித்து முதல்வர் ஆசனத்தில் அமர்ந்தார். அடுத்த 10 ஆண்டுகளுக்கும் அதற்கு இடையே வந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று அவரே தமிழக நிரந்தர மக்கள் சக்தியாகவே திகழ்ந்து முதல்வராகப் பணியாற்றினார். மேலும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia