இரவிக்குமார் (Ravikumar (writer)) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். எழுத்தாளர், வழக்கறிஞர்[சான்று தேவை] அரசியல்வாதி மற்றும் சாதி எதிர்ப்பு ஆர்வலர் என பன்முகங்களில் இவர் இயங்கினார். அம்பேத்கார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர்[1] நிறப்பிரிகை என்ற பத்திரிகை இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.[சான்று தேவை] நிறப்பிரிகை இதழ் 1990 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியது.[2] இரவிக்குமார் விழுப்புரம் மக்களவையின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.[3][4]
வாழ்க்கைக் குறிப்பு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டத்தில் காவிரிக்கரை கிராமமான மாங்கணாம்பட்டில் துரைசாமி- கனகம்மாள் தம்பதியருக்கு 10-06-1961 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். செண்பகவல்லி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஆதவன், அதீதன் என்ற பிள்ளைகள் உள்ளனர்.
சுவாமி சகஜாநந்தா- மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள் , மணற்கேணி பதிப்பகம்
எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது (2009) ஈழ இனப்படுகொலை குறித்த கவிதைகள், மணற்கேணி பதிப்பகம்
ஆங்கில நூல்கள்
We, the Condemned (1999) (Against Death Penalty)
Venomous Touch (2009) selected articles of Ravikumar, Samya, kolkatta
Waking is another dream (2010) Poems on Mullivaykal, Navayana Publishing
Tamil Dalit Writing (2010) An anthology of Tamil Dalit Literature , Oxford University Press[11]
இதழ்கள் வெளியீடு
நிறப்பிரிகை- நவீன அரசியல் விவாதக்களத்தை உருவாக்கிய நிறப்பிரிகை இதழை அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியவர்களோடு இணைந்து நடத்தியவர்.அந்த இதழ் இவரது முகவரியிலிருந்துதான் இவரால் வெளியிடப்பட்டது.
தலித்- தலித் இலக்கியத்துக்கென தமிழில் வெளியிடப்பட்ட தலித்- இருமாத இதழின் ஆசிரியர். அது பதினொரு இதழ்கள் வெளியானபின் நின்றுபோனது.[9]
போதி - தலித் வரலாற்றுக்கென இவரால் உருவாக்கப்பட்ட காலாண்டிதழ். இரண்டு இதழ்கள் வெளியாகி நின்றுபோயிருந்தது. தற்போது மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளது.[9]
மணற்கேணி- இவரை ஆசிரியராகக்கொண்டு தமிழ்ச் செவ்வியல் இலக்கியம், தொல்லியல் முதலானவை குறித்த ஆழமான ஆய்வுகளைத் தாங்கி வெளிவரும் இருமாத இதழ்.
↑ 10.010.110.2பேரா. க.பஞ்சாங்கம் (2013-12-30). "அறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி… ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்". திண்ணை. http://puthu.thinnai.com/?p=23944. பார்த்த நாள்: 2014-06-11. "மணற்கேணிப் பதிப்பகத்தின் வெளியீடாக ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’, ‘உரையாடல் தொடர்கிறது’ ஆகிய இரண்டு நூல்கள் ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ‘பணிய மறுக்கும் பண்பாடு’ என்ற நூலிலும், வேறு சில இதழ்களிலும் கட்டுரைகளாக வந்தவைகள்தான் என்றாலும் இருத்தல் குறித்த தத்துவம் சார்ந்த மொழியாடல்கள் என்பதனால் மீண்டும் மீண்டும் வாசிப்பைக் கோரி நிற்கின்றன இந்த எழுத்துக்கள்."