பருத்தித்துறை பிரதேச சபை
பருத்தித்துறை பிரதேச சபை (Point Pedro Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை ஆகியவற்றுக்குள் அடங்கும் பகுதிகளைத் தவிர்த்து, பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 185.00 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் பருத்தித்துறை நகரசபை, கடல் என்பனவும்; தெற்கில் முல்லைத்தீவு மாவட்டம், யாழ்ப்பாண நீரேரி ஆகியனவும்; மேற்கில் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை, கிளிநொச்சி மாவட்டம் என்பனவும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 8 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2] வட்டாரங்கள்26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள பருத்தித்துறை பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் கீழ் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3]
தேர்தல் முடிவுகள்1998 உள்ளாட்சித் தேர்தல்29 சனவரி 1998 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[4][5]
2011 உள்ளாட்சித் தேர்தல்23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[6]
2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 9 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 21 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]
2018 தேர்தலில் பருத்தித்துறை பிரதேச சபையின் தலைவராக அரியரத்தினம் சாள்ஸ் அரியகுமார் (உடுத்துறை, இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக குமாரசிங்கம் தினேசு (பொலிகண்டி, இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3] 2025 உள்ளூராட்சித் தேர்தல்2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[7] 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 8 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2025 தேர்தலில் பருத்தித்துறை பிரதேச சபையின் தலைவராக உதயகுமார் யுகதீஸ் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக கனகரத்தினம் சிறிகாந்த் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[8][9] இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia