பாங்கிலி பிராந்தியம்
பாங்கிலி பிராந்தியம் (ஆங்கிலம்: Bangli Regency; பாலினியம்: Kabupatén Bangli; இந்தோனேசியம்: Kabupaten Bangli) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு பிராந்தியம் ஆகும். இந்தப் பிராந்தியத்தின் தலைநகரம் பாங்கிலி (Bangli). இதுவே பாலியில் நிலத்தால் சூழப்பட்ட ஒரே பிராந்தியம் ஆகும், 1907-ஆம் ஆண்டு வரை, பாங்கிலி பிராந்தியம் பாலியின் ஒன்பது இராச்சியங்களில் ஒன்றாக இருந்தது.[2] பாங்கிலி பிராந்தியத்தின் தலைநகரமான பாங்கிலி நகரில் 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புரா கெகான் எனும் புகழ்பெற்ற இந்து கோயில் உள்ளது. புரா டாலெம் கலிரான் கோயில் (Pura Dalem Galiran), பாங்கிலி நகரில் இருந்து வடமேற்கே 1.4 கி.மீ தொலைவில் உள்ளது.[3] பாங்கிலி நகர மையத்திலிருந்து தெற்கே 1.3 கி.மீ தொலைவில் புரா டாலெம் பெனுங்கேக்கான் கோயில் (Pura Dalem Penunggekan) உள்ளது.[4] இந்தக் கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் நரகத்தில் உள்ள பாவிகளின் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் காட்டப்படுகின்றன. பண்டைய காலங்களில் இருந்து பாங்கிலி பிராந்தியம், பாலி தீவின் இராச்சியங்களில் ஒன்றாக, மிகப் பழைமையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளது. அதன் வரலாற்று முக்கியத்துவத்திற்கு காரணம்; அதன் பாதுகாக்கப்பட்ட கோயில்கள் மற்றும் அதன் நிலப்பரப்பில் காணப்படும் பண்பாட்டுப் பாரம்பரியக் கூறுகள் ஆகும்.[5] வரலாறுபல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தெற்கு மற்றும் கிழக்கு பாலியின் நீர்ப்பாசனத்திற்கான குறிப்பிடத்தக்க நீர் ஆதாரமான பத்தூர் ஏரியின் அமைவிடம் காரணமாக, பாங்கிலி பிராந்தியம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. அதன் விலைமதிப்பற்ற நீர் வழங்கல் முறை; பத்தூர் ஏரிப் பகுதியை மிகவும் விரும்பத்தக்க இடமாக மாற்றியது. அதுவே அண்டை ஆட்சியாளர்களிடையே கடுமையான மோதல்கள் மற்றும் அதிகாரப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.[5] பாங்கிலி பிராந்தியம், பாலியில் நிலத்தால் சூழப்பட்ட ஒரே பிராந்தியம் ஆகும். இதன் வடக்குப் பகுதியில் பத்தூர் மலை உள்ளது. உபுட் நகரத்தில் இருந்து கிந்தாமணி வழியாக வடக்கு கடற்கரைக்குச் செல்லும் பிரதான சாலைக்கு அருகில் அந்த பத்தூர் மலை உள்ளது.[6][7] பாலினிய இகாகா ஆண்டுஇந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், பாங்கிலி பிராந்தியம் ஒரு முக்கிய இராச்சியமாக உருவெடுத்தது. இறுதியில் பாங்கிலி நகரம் ஒரு முக்கிய பாலினிய இராச்சியத்தின் தலைநகரமாக மாறியது. பாலினிய நாட்காட்டியில், இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் 1204-ஆம் ஆண்டில் ஏற்பட்டது. அதன் விளைவாக பாலினிய இகாகா ஆண்டு (Balinese Icaka year) உருவானது. அதுவே பாங்கிலி பிராந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது. அப்பகுதியில் அதிகாரம் மற்றும் நிர்வாக மையமாகவும் அதன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியது.[5][8] ஓர் இராச்சியத்தின் தலைநகராக பாங்கிலி முக்கியத்துவம் பெற்றது. கைவினைஞர்கள், அறிஞர்கள் மற்றும் மதத் தலைவர்களை பாங்கிலி நகரம் ஈர்த்தது; அப்பகுதியின் செழிப்பான கலாசார மற்றும் கலைப் பாரம்பரியத்திற்குப் பங்களித்தனர். கோயில்கள், அரண்மனைகள் மற்றும் பிற கட்டிடக்கலை அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை இன்றும் அந்தப் பழைய இராச்சியத்தின் செழிப்பையும்; ஆழமாக வேரூன்றிய ஆன்மீகத்தையும் பிரதிபலிக்கின்றன.[5][9] நிர்வாக மாவட்டங்கள்பாங்கிலி பிராந்தியம் 4 மாவட்டங்களாக (Districts of Indonesia) (Kecamatan) பிரிக்கப்பட்டுள்ளது.
காலநிலைபாங்கிலி பிராந்தியம் வெப்பமண்டல மழைக்காடு காலநிலை (Af) கொண்டது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மிதமான மழைப்பொழிவும், அக்டோபர் முதல் மார்ச் வரை அதிக மழைப்பொழிவும் இருக்கும்.
காட்சியகம்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia