பெரணமல்லூர்
பெரணமல்லூர் (ஆங்கிலம்:Peranamallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ள பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் பேரூராட்சியும் ஆகும். இது வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். பெரணமல்லூர் பேரூராட்சியிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இஞ்சிமேடு பெரியமலை சிவனாலயம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்திலும் திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதை போல இங்கும் கார்த்திகை தீபம், 1999-ம் ஆண்டு முதல் ஏற்றப்படுகிறது.மேலும் பிரசித்தி பெற்ற செங்கம்பூண்டி சித்தாத்தூர் அம்மன் ஆலயம் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அமைவிடம்திருவண்ணாமலையிலிருந்து 63 கி.மீ. தொலைவில் உள்ள பெரணமல்லூர் பேரூராட்சிக்கு கிழக்கே வந்தவாசி 23 கி.மீ.; மேற்கே ஆரணி 22 கி.மீ.; வடக்கே செய்யாறு 25 கி.மீ. மற்றும் தெற்கில் பெரிய கொழப்பலூர் 14 கி.மீ. தொலைவிலும், தேசூர் 23 கி.மீ. தொலைவிலும் உள்ளது.இங்கிருந்து சென்னை, தாம்பரம்,புதுச்சேரி,காஞ்சிபுரம்,திண்டிவனம், பெங்களூரு,வேலூர் போன்ற நகரங்களுக்கு நேரடி போக்குவரத்து வசதிகள் உள்ளது பேரூராட்சியின் அமைப்பு15.02 ச.கி.மீ. பரப்பும் , 12 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[2] 2011 சட்டமன்ற பொதுத்தேர்தல் வரை தமிழக சட்டமன்ற தொகுதியாக விளங்கியது.கேரளாவின் ஆளுநராக 27 அக்டோபர் 1982 முதல் 23 பெப்ரவரி 1988 வரை பதவி வகித்த பா.ராமச்சந்திரன் அவர்கள் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார். நிர்வாகம் மற்றும் அரசியல்இந்நகரம் இரண்டாம் நிலை பேரூராட்சியாகஇன்று வரை செயல்பட்டு வருகிறது. பெரணமல்லூர் நகரம்,தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இரண்டாம் நிலை பேரூராட்சியாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இந்த நகரை பெரணமல்லூர் பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.
மக்கள் தொகை பரவல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6945மக்கள்தொகை கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.8% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 869 மற்றும் 54 ஆகவுள்ளனர்.[3] பெரும்பாலும் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது. புவியியல்இவ்வூர் (12°34′12″N 79°26′02″E / 12.5699°N 79.4338°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 145.87 மீட்டர்கள் (478.6 அடி) உயரத்தில் இருக்கின்றது. வரலாறுஇரு அரச படையினர் போர் செய்ததால் ஊருக்கு "பேரணிமல்லூர்' என்ற பெயர் ஏற்பட்டு, பேரணிநல்லூர் என மருவியது. காலப்போக்கில் பெரணமல்லூர் ஆகிவிட்டது. பனையாற்றின் குறுக்கே பெரிய அணை கட்டப்பட்டதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சோழ மன்னன் தன் படைகளுடன் பழையாறைக்குச் செல்லும்போது, இங்குதான் தங்கி ஓய்வெடுப்பார். இதனால், இந்த ஊர் சுற்று வட்டார கிராமங்களுக்கு தலைமையிடமாக இருந்துள்ளது.பழமை வாய்ந்த சிவன் கோயில்,பெருமாள் கோயில்,வரத ஆஞ்சநேயர் கோயில்,எட்டியம்மன் ஆலயம்,கங்கை அம்மன் கோயில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளது கல்வி நிலையங்கள்பெரணமல்லூரில் உள்ள இவ்விரு பாடசாலைகளில் இருந்து பல்வேறு கல்வியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். ![]() ![]() ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia