மலேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு
மலேசிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு (மலாய்: Kementerian Pembangunan Usahawan Dan Koperasi Malaysia; ஆங்கிலம்: Ministry of Entrepreneur Development and Cooperative Malaysia) என்பது மலேசியாவின் தொழில் முனைவோர் மேம்பாடு; கூட்டுறவு மேம்பாடு ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இயங்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும். தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களைத் திட்டமிடுதல்; ஒருங்கிணைத்தல்; செயல்படுத்துதல்; மற்றும் கண்காணித்தல் (To Plan, Coordinate, Implement and Monitor Entrepreneur Development Programs) ஆகியவற்றுக்கு இந்த அமைச்சு முன்னுரிமை வழங்குகிறது. வரலாறு1974-ஆம் ஆண்டில் மலேசிய பொது நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு அமைச்சு (Ministry of Public Corporation Coordination) நிறுவியதில் இருந்து மலேசிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் வரலாறு தொடங்குகிறது. அது பின்னர் 1976-ஆம் ஆண்டில் பொது நிறுவனங்களின் அமைச்சாக (Ministry of Public Enterprises) மாற்றப்பட்டது. மலேசியாவின் பொது நிறுவனங்களான மாரா (Majlis Amanah Rakyat); மலேசிய நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் ஊடா (Urban Development Authority of Malaysia); மாநில பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (State Economic Development Corporation) போன்ற நிறுவனங்களைக் கவனிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் பொது நிறுவனங்களின் அமைச்சு பொறுப்பு வகித்தது. தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு8 மே 1995-இல் பொது நிறுவனங்களின் அமைச்சகத்திற்கு பதிலாக தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு (Ministry of Entrepreneur Development) நிறுவப்பட்டது. மார்ச் 27, 2004-இல் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சிற்கு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு (Ministry of Entrepreneur Development and Cooperatives) என்று ஒரு புதிய பெயர் வழங்கப்பட்டது. 2009-இல் நஜிப் துன் ரசாக் மலேசியாவின் பிரதமரான பிறகு, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு ரத்து செய்யப்பட்டது. அதன் பங்களிப்புகள் பிரிக்கப்பட்டு மற்ற மற்ற அமைச்சுகளால் உள்வாங்கப்பட்டன. நிறுவனங்கள்
சான்றுகள்
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia