மலேசிய பொருளாதார அமைச்சு
மலேசிய பொருளாதார அமைச்சு (மலாய்: Kementerian Ekonomi Malaysia; ஆங்கிலம்: Ministry of Economy) (MOE) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சு தொடக்கத்தில் பிரதமர் துறையின் கீழ் தனி ஒரு துறையாக இருந்தது; மற்றும் ஓர் அமைச்சரால் நிர்வகிக்கப்பட்டது. அப்போது அந்தத் துறையின் கீழ் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு (Economic Planning Unit) இயங்கி வந்தது. பின்னர் 21 மே 2018-ஆம் தேதி, பொருளாதாரச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் மகாதீர் பின் முகமதுவால் ஒரு பொருளாதார அமைச்சு புதிதாக உருவாக்கப்பட்டது. பொது2020-ஆம் ஆண்டில் மலேசியாவில் ஓர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. அதன் விளைவாக, மலேசியாவின் அரசியல் அதிகாரத்தை பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி கைப்பற்றிக் கொண்டது. அரசாங்கம் மாறியதும், இந்தப் பொருளாதார அமைச்சு மீண்டும் பிரதமர் துறையின் கீழ் இணைக்கப்பட்டது. அன்வார் இப்ராகிம் அமைச்சரவை ஆட்சிக்கு வந்ததும், அதே அமைச்சு மீண்டும் நிறுவப்பட்டு, பொருளாதார அமைச்சு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2 டிசம்பர் 2022 அன்று, பிரதமர், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், புதிய பொருளாதார அமைச்சராக ராபிசி ராம்லியை நியமித்தார்.[1] பிரிவுகள்
சான்றுகள்:[2] மேலும் காண்கசான்றுகள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia