ராம்பூர்வா போதிகைகள்
ராம்பூர்வா காளை (Rampurva capitals) இந்தியாவின் வடக்கு பிகாரில் உள்ள மேற்கு சம்பாரண் மாவட்டதில், நேபாளத்தின் எல்லையை ஒட்டி அமைந்த தொல்லியல் களம் ஆகும்.[1] பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஏ. சி. எல். கார்லைலி என்பவர், கி மு மூன்றாம் நூற்றாண்டு காலத்திய, அசோகரின் இரண்டு தூண்களை, 1907ல் ராம்பூர்வா அகழ்வாய்வின் போது கண்டுபிடித்தார்.[2][3] ராம்பூர்வாவின் காளை போதிகைஅசோகரின் தூண்களில் காணப்பாடும் ஏழு விலங்குகளின் தூண்களில், ராம்பூர்வாவில் மட்டும் காளையின் போதிகை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தூணின் மேல் காளையின் சிற்பமும், அதனடியில் விசிறி போன்று சுழலும் சுடரொளிகளின் நடுவில் தாமரைப் பூ சிற்பத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ![]() ராம்பூர்வாவில் காணப்படும் அபாகஸ் சிற்பக்கலை, பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலையில் வடிக்கப்பட்டுள்ளது.[4] சங்காசியாவில் காணப்படும் அசோகரின் யானைப் போதிகைத் தூண் இதே போன்ற கட்டிடக் கலை வடிவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடக் கலை அமைப்பு பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை மற்றும் பாரசீகக் கட்டிடக் கலையிலிருந்து தோன்றியதாகும்.[5] ராம்பூர்வா சிங்கப் போதிகை![]() ராம்பூர்வா சிங்கத் தூணில் அசோகரின் கல்வெட்டுகள் உள்ளது.[6] மரபுரிமை பேறுகள்இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையில் ராம்பூர்வா காளையின் சிற்பம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[7] படக்காட்சிகள்
இதனையும் காண்க![]() ![]() ![]() ![]() ![]() ![]()
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia