தர்மராஜிக தூபி
![]() தருமராசிக தூபி (Dharmarajika Stupa) இதனை தட்சசீலம் பெரிய தூபி என்றும் அழைப்பர். மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில் கிமு 3-ஆம் நூற்றாண்டில், கௌதம புத்தரின் எரியூட்டப்பட்ட உடலிருந்து கிடைத்த சில எலும்புகள் மற்றும் சாம்பலின் ஒரு பகுதியைக் கொண்டு முதலில் தருமராசிக தூபி நிறுவப்பட்டது.[1] கிபி 2-ஆம் நூற்றாண்டில் குசான் பேரரசு காலத்தில் தருமராசிக தூபியை மறுசீரமைத்து பல பெரிய விகாரைகளுடன் நிறுவப்பட்டது. கிபி 5-ஆம் நுற்றாண்டில் எத்தலைட்டுகளின் மன்னர் மிகிரகுலன் ஆட்சிக் காலத்தில் தருமராசிக தூபி முற்றிலும் சிதைக்கப்பட்டது. இப்பௌத்த தூபி பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகணத்தின், தட்சசீலத்தில் உள்ளது.[2] 1980ல் இயுனெசுகோ நிறுவனம், தருமராசிக தூபியை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்ததுள்ளது.[3] இப்பகுதி இசுலாமியமயமான போது, தருமராசிக தூபி மேலும் சிதைக்கப்பட்டது. சான் மார்சல் எனும் பிரித்தானிய தொல்லியல் ஆய்வாளர், 1913ல் சிதைந்திருந்த தருமராசிக தூபியை அகழ்வாய்வு செய்து பல தொல்பொருட்களை கண்டெடுத்தார். ![]() தூபியின் நினைவுச் சின்னங்கள்புத்தரின் எலும்புகள்தர்மராஜிக தூபியின் தொல்லியல் களத்தில் கிடைத்த புகழ் பெற்ற புத்தரின் இரண்டு எலும்புத் துண்டுகள்[4] மற்றும் அபூர்வமான பௌத்த நினைவுச் சின்னங்களை பௌத்தர்களின் வழிபாட்டிற்காக ஒரு மாத காலத்திற்கு, 2016ல் இலங்கைக்கு அனுப்பப்பட்டது.[5] படக்காட்சிகள்
இதனையும் காண்கஅடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia