வாச்சாத்தி
வாச்சாத்தி (Vachathi) என்பது இந்தியா, தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636 904.[1] இது பே. தாதம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது. அமைவிடம்இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°57'55.5"N 78°28'14.2"E[3] ஆகும். மக்கள் வகைப்பாடு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 250 குடும்பங்களும் 1032 [4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 517 ஆண்களும் 515 பெண்களும் அடங்குவர். வாச்சாத்தி வன்முறைஇந்த சிற்றூரில் பழங்குடியினர் பெருமளவில் வாழ்கின்றனர். 1992 சூன் 20-22 தேதிகளில் வாச்சாத்தி கிராம மக்கள் மீது தமிழ்நாட்டுக் காவல்துறையினர், தமிழ்நாடு வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நடத்திய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே நிகழ்வே வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது. காவல் துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த வன்முறைச் செயலில் 34 பேர் உயிரிழந்தார்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு வாச்சாத்தி என்ற திரைப்படம் 2012 இல் வெளியானது. மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia