விவிலிய புத்தகங்கள் (நூல்கள்)யூத சமயத்தவராலும்கிறித்தவ சமயத்தாராலும் புனித நூல்களாக ஏற்கப்பட்டு, அவர்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைகின்றன. யூதர் விவிலியம் என்று ஏற்கின்ற நூல் தொகுப்பைக் கிறித்தவர்பழைய ஏற்பாடு என்னும் பெயரால் அழைப்பர். அதை எபிரேய விவிலியம் என்று கூறுவதும் உண்டு.
புதிய ஏற்பாட்டில் உள்ள 27 நூல்களையும் எல்லாக் கிறித்தவ சபைகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. அவற்றின் வரிசை அமைப்பு மட்டும் சில வேளைகளில் மாறுபடுகிறது. கத்தோலிக்கம், கிரேக்க மரபுவழி சபை, புரடஸ்தாந்தம் ஆகிவை ஒரே வரிசைமுறையைக் கொண்டுள்ளன. அர்மீனிய, எத்தியோப்பிய மரபுகள் வேறு வரிசைமுறையைக் கடைப்பிடிக்கின்றன.
↑ 7.07.1கத்தோலிக்க விவிலியத்தில் 6ஆம் அதிகாரம் (எரேமியாவின் கடிதம்) அதிகமாக உள்ளது. யூத விவிலியம் மற்றும் புரடஸ்தாந்த விவிலியத்தில் இந்நூல் இடம் பெறவில்லை
↑ 11.011.1கத்தோலிக்க, மற்றும் கீழை மரபு சபை விவிலியங்களில் தானியேல் நூலோடு மூன்று இணைப்புகள் மேலதிகமாக உள்ளன. அவை இளைஞர் மூவரின் பாடல், சூசன்னா, பேல் தெய்வமும் அரக்கப்பாம்பும் என்பவையாகும். இவை புரடஸ்தாந்த பழைய ஏற்பாட்டில் இல்லை.
↑இந்நூல்கள் கிறித்தவ விவிலியத் திருமுறையில் வரலாற்று மற்றும் ஞான நூல்கள் வரிசையில் உள்ளன.