உலவாக்கிழி அருளிய படலம்
உலவாக்கிழி அருளிய படலம் என்பது சைவ சமய நூலான திருவிளையாடல் புராணத்தின் 31ஆம் படலமாகும் இது கூடல் காண்டத்தில் இடம் பெற்றுள்ளது இதில் 1705 முதல் 1723 வரை பாடல்கள் இடம்பெற்றுள்ளன [1] கதைகுலபூஷண பாண்டியன் செல்வங்களை அற வழியில் செலவிட்டான், நெறி தவறாது பூஜைகளை மேற்கொண்டு வந்ததால் தானே சிறந்த பக்தன் என்ற எண்ணம் இதனால் அந்தணர்களையும் அறிவில் சிறந்த பெரியோர்களையும் மதிக்க தவறியதால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர் [2] இறைவன் உலவாக்கிழி அருளல்நாட்டில் மழைப் பெய்த்து பசி பட்டினியால் மக்கள் துன்புற்றனர் இதனால் மன்னன் வருத்தமுற்று சொக்கநாதரிடம் முறையிட்டான் பின் அரண்மனையில் தூக்கமில்லாமல் புரண்டுக் கொண்டிருந்தான் அப்போது யாரோ கையில் ஏதோ வைத்தது போல் இருந்தது ஏதோ ஒரு குரல் கேட்டது இதோ உலவாக்கிழி இது அள்ள அள்ள குறையாது இதை வைத்து வறுமையை தீர்த்துக்கொள் என்றது அக்குரல், திடுக்கிட்டு எழுந்தான் மன்னன், கையில் ஒரு பொற்கிழி இருந்தது [2] உண்மை உணர்ந்த மன்னன்வறுமை தீர லழி கிடைத்து விட்டது தான் செய்த தவறு என்னவென்று தெரியவில்லையே என்று வருந்தியபடி கண்ணயர்ந்தான் மன்னன், கனவில் ஒரு குரல் கேட்டது குலபூஷணா தானே சிறந்த பக்தன் என்ற எண்ணம் கொண்டாயே, பக்தனுக்கு இது முறையாகுமா? இதை உணர்த்த தான் இவ்வாறு செய்தேன் என்றது அக்குரல் கண் விழித்த மன்னன் தன் தவறை உணர்த்த இறைவன் செய்த செயல் இது என்று உணர்ந்தான், மறுநாள் பொற்கிழியை பட்டுத் துணில் வைத்து பூஜை செய்து மக்களை வரவழைத்து பொன்னும் பொருளும் கொடுத்தான் அந்தணர்களையும் பெரியோர்களையும் தன் தவறை பொறுத்தருளும்படி வேண்டினான், நாடு செழித்து பழைய நிலைக்கு வந்தது [2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia