ஆடுதுறை - 15 (நெல்)
ஏ டி டீ - 15 (ADT 15) (வட்டார வழக்கு செங்குறுவை (Senkuruvai) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஏ டி டீ - 4 நெல் இரகத்திலிருந்து சடுதிமாற்றம் (Mutantion) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1] வெளியீடுதமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1937 ஆம் ஆண்டு, இந்த நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1] காலம்குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 105 - 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற குறைந்த கால நெற்பயிர்கள், குறுவை பட்டத்திற்கு (பருவம்) ஏற்றதாக கூறப்படுகிறது.[1] சாகுபடிகுட்டையாகவும் மற்றும் தடித்தும் காணப்படும் இதன் தானிய மணிகள், ஒரு எக்டேருக்கு சுமார் 4200 கிலோவரை மகசூல் தரக்கூடியது.[1] தஞ்சை, திருச்சி மற்றும் செங்கை போன்ற மாவட்டங்களில் அதிக விளைச்சல் தரும் இந்த நெற்பயிர்கள், நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் பரவலாக சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது.[2] குறிப்புகள்
இவற்றையும் காண்கசான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia