சடைக்கார் (நெல்)
சடைக்கார் (Sadaikkar) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, “ஆகாடாவலசை” (Aakadavalasai) என்னும் நாட்டுப்புறப் பகுதியில் மட்டுமே விளைவதாக கருதப்படும் இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1200 கிலோ தானிய மகசூலும், 3 டன்கள் அளவுக்கு வைக்கோலும் கிடைப்பதாக கூறப்படுகிறது.[1] பருவகாலம்பின் சம்பா அல்லது தாளடிப் பருவம் (பட்டம்) எனப்படும் செப்டம்பர் - ஒக்டோபர் மாதங்களில் விதைத்து, பிப்ரவரி - மார்ச் மாதங்களில் அறுவடைச் செய்யபடுகிறது.[1] மேலும் இப்பருவத்தை பிசாணம் என்றும் அழைக்கப்படும் இந்த பருவத்தில், மத்தியகால பயிர்கள் மற்றும் அதற்கும் மேலுள்ள நீண்டகால நெற்பயிர்களை சாகுபடி செய்ய இது ஏற்றப் பட்டமாகும்.[2] வளருகைமணற்பாங்கான நீர்ப்பிடிக்கும் நிலப்பரப்புகளில் ஏற்று வளரக்கூடிய இந்த நெல் வகைக்கு, மாதம் மும்முறை மழைப்பொழிவு தேவையென கருதப்படுகிறது. மேலும் இந்த நெற்பயிரை, இலை சுருட்டுப்புழுவைத் தவிர மற்ற பூச்சிகளோ, அல்லது நோய்களோ தாக்குவதில்லை என கூறப்படுகிறது[1] குறிப்புகள்
இவற்றையும் காண்கசான்றுகள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia