நீலஞ்சம்பா (நெல்)
நீலஞ்சம்பா (Neelan samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள, “சுக்கன் கொள்ளை” எனும் நாட்டுப்புறப் பகுதியில் பிரதானாமாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1500 கிலோ நெல் தானியமும், சுமார் 1800 கிலோ வைக்கோலும் கிடைப்பதாக கூறப்படுகிறது.[1] பருவகாலம்மத்திய, மற்றும் நீண்டக்கால நெல் வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான சம்பா பட்டம் எனும் இப்பருவத்தில், 175 - 180 நாள் வயதுடைய நீலஞ்சம்பா பயிரிடப்படுகிறது.[1] மேலும் ஆகத்து, மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடங்கக்கூடிய சம்பா பட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாக விளங்குகிறது.[2] வளருகைநீர் சூழ்ந்த நிலைகளில் உள்ள நிலங்களில் செழித்து வளரக்கூடிய இந்த நெல் வகையின் அரிசி, தடித்த பெரு நயத்துடன் சிவப்பு நிறத்தில் காணப்படும். மேலும், முற்காலத்தில் படகில் சென்று அறுவடை செய்யப்பட்ட நீலஞ்சம்பா நெற்பயிர்கள்,[3] இலைத் தத்துப்பூச்சி மற்றும் கதிர்நாவாய்ப் பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்டவை.[1] குறிப்புகள்
இவற்றையும் காண்கசான்றுகள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia