மாப்பிள்ளைச் சம்பா
மாப்பிள்ளைச் சாம்பா (Mapillai Samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். 1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சிக்குப் பிறகு வழக்கிழந்த நெல் வகைகளில் ஒன்றாக கருதப்படும் இது, தனது தன்மையின் பெயரே உதாரணத்தை அடிப்படையாகக் கொண்டது.[1] முற்காலத்தில் திருமணம் செயதுகொள்ளும் இளைஞனான மணமகன் (மாப்பிள்ளை), திருமணத்திற்கு முன் தனது பலத்தை நிருபிக்கும் வகையில் இளவட்டக் கல்லை தூக்கும் வழக்கம் தமிழர்களின் மரபுகளில் ஒன்றாக இருந்துள்ளது. ஆகவே திருமணத்திற்கு முன்னதாக உடல்வலிமையை அதிகரிக்கக்கூடிய இந்நெல்லின் அரிசியில் உருவாக்கப்பட்ட பலகாரங்களை மாப்பிள்ளைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.[1][2] பருவம்நீண்டகால (155 - 160) நெல் வகையான இது, சூலை 15 முதல் சனவரி 14 முடிய சம்பா பருவத்திலும், மற்றும் செப்டம்பர் 15 முதல் பிப்ரவரி 14 வரையான பின் சம்பா பருவத்திலும் பொதுவாக பயிரிடப்படுகிறது.[1][3] குறிப்புகள்
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia