சித்திரை கார் (நெல்)
சித்திரை கார் என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ‘திருப்புல்லாணி’ எனும் நாட்டுப்புற பகுதியில் பிரதானமாக விளையக்கூடிய இந்த நெற்பயிர், ஒரு ஏக்கருக்கு சுமார் 1000 கிலோ வரையில் மகசூல் கொடுப்பதாக கருதப்படுகிறது. மேலும் பொதுவாக இவ்வகை நெற்பயிர்களை விவசாயிகள், “மட்டை” மற்றும் “நொருங்கன்” எனவும் அழைக்கபடுகின்றனர்.[1] பருவகாலம்110 நாட்கள் வயதுடைய இந்நெல் இரகத்தை செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவத்தில் (புரட்டாசியின் நடுப்பகுதியில்) விதைத்து, சனவரியில் (தையில்) அறுவடைச் செய்யபடுகிறது.[1] மேலும் இதேப் பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[2] வளருகைநீர்நிலைகளின் கரையோரப்பகுதிகளில் காணப்படும் மணற்பாங்கான நிலப்பரப்பில் வறட்சியைத் தங்கி வளரக்கூடிய சித்திரை கார், அதிக உயரம் வளர்ந்து வைக்கோலைப் பெருக்கிக் கொடுக்கக்கூடியது.[1]
இவற்றையும் காண்கசான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia