கப்பக்கார் (நெல்)
கப்பக்கார் (Kappakar) என்னும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், திருவண்ணாமலை மாவட்டத்தின், வந்தவாசி வட்டராத்தில் உள்ள "தக்கண்டராபுரம்" எனும் நாட்டுப்புறப் பகுதியில் முதன்மையாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1350 கிலோ நெல் தானியமும், சுமார் 1800 கிலோ வைக்கோலும், மகசூலாக கிடைப்பதாக கருதப்படுகிறது.[1] பருவகாலம்மத்திய, மற்றும் நீண்டக்கால நெல் வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான சம்பா பட்டம் எனும் இப்பருவத்தில், 40 நாட்கள் நாற்றங்கால் காலத்துடன் 150 - 160 நாள் வயதுடைய நீண்டக்கால நெற்பயிரான கப்பக்கார் பயிரிடப்படுகிறது.[1] மேலும் ஆகத்து, மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடங்கக்கூடிய இச்சம்பா பட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாக கருதப்படுகிறது.[2] வளருகைநேரடி நெல் விதைப்பு, மற்றும் நாற்று நடுதல் என இரண்டு முறைகளையும் பின்பற்றி விளைவிக்கப்படும் இந்த நெற்பயிர், களிமண் நிலம் மற்றும் நீர் சூழ்ந்த பரப்புகள் போன்ற வறட்சி நிலங்கள் இரண்டிற்கும் ஏற்று அதிக மகசூலைத் தரக்கூடியதாகும்.[1] குறிப்புகள்
இவற்றையும் காண்கசான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia