இளைய மகாமகம் 2015இளைய மகாமகம் 2015 கும்பகோணத்தில் இவ்வாண்டு நடைபெறும் சிறப்பான விழாவாகும். ஒவ்வொரு மகாமகத்தின்போது அதற்கு முதல் ஆண்டு இளைய மகாமக ஆண்டாகக் கொள்ளப்படும் நிலையில் 2015ஆம் ஆண்டு இளைய மகாமக ஆண்டாகக் கருதப்படுகிறது.[கு 1] கும்பகோணத்தில் இளைய மகாமகத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் பந்தல்கால் முகூர்த்த விழா 3.2.2015 (திங்கட்கிழமை, ஜய, தை 20) நடைபெற்றது. இவ்விழா கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், சோமேஸ்வரன் கோயில் ஆகிய கோயில்களில் நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றன. பின்னர் பந்தல் காலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பந்தல்கால் நடப்பட்டது. [1] கொடியேற்றம்சைவக் கோயில்கள்23.2.2015 (திங்கட்கிழமை, ஜய, மாசி 11) கும்பகோணத்திலுள்ள காசி விசுவநாதர் கோயில், ஆதிகும்பேஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாள் விழா தொடங்கியது. [2] இவ்விழா நாட்களில் சேஷ, கமல, பூத, கிளி, யானை, மூஷிகம், மயில், ரிஷபம், கைலாச, குதிரை போன்ற பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுவது சிறப்பானதாகும். [3] 26.2.2015 (வியாழக்கிழமை, ஜய, மாசி 14) கும்பேஸ்வரர் கோயிலிலுள்ள 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பின்னர் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது. [4] 27.2.2015 (வெள்ளிக்கிழமை, ஜய, மாசி 15) கும்பேஸ்வரர் கோயில், காசி விசுவநாதர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில்களில் ஓலைச்சப்பரத்தில் இறைவனும் இறைவியும் வீதியுலா வந்தனர். [5] கும்பேஸ்வரர் கோயிலிலிருந்து ஐந்து சப்பரங்கள் வீதியுலா வந்தன. வைணவக் கோயில்கள்சிவன் கோயில்களில் நடைபெற்றதுபோலவே பெருமாள் கோயிலான வராகப்பெருமாள் கோயிலில் 24.2.2015 அன்று கொடியேற்றம் நடைபெற்றது. திருப்பணி நடைபெறுவதால் சக்கரபாணி கோயில், சார்ங்கபாணி கோயில் ஆகிய கோயில்களில் கொடியேற்றம் நடைபெறவில்லை. [6] 27.2.2015 அன்று வராகப்பெருமாள் கோயிலில் கருட சேவையுடன், ஓலைச்சப்பரத்தில் இறைவனும் இறைவியும் வீதியுலா வந்தனர். தேரோட்டம்9.2.2015 (திங்கட்கிழமை, ஜய, தை 26)கும்பேஸ்வரன் கோவிலில் இளைய மகாமகம் தேரோட்டம் நடத்துவதற்கு, தேருக்கு முகூர்த்தம் நடைபெற்றது [7] 3.3.2015 (செவ்வாய்க்கிழமை, ஜய, மாசி 19) கும்பகோணத்தில் கும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர் ஆகிய கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது. [8] கும்பேஸ்வரர் கோயிலில் இரு தேர்களும், காசி விசுவநாதர், அபிமுகேஸ்வரர் கோயில்களில் ஒவ்வொரு தேரும் தேரோட்ட நிகழ்வில் கலந்துகொண்டது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. கும்பேஸ்வரர் கோயிலில் விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்ரர் ஆகிய மூவருக்கும் உரிய தேர்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதால், கும்பேஸ்வரர் எழுந்தருளிய தேரில் விநாயகரும், வள்ளிதெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானும், மங்களாம்பிகை எழுந்தருளிய தேரில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர். தீர்த்தவாரி4.3.2015 (புதன்கிழமை, ஜய, மாசி 20) காலை 10.30 மணிக்கு மேல் தொடங்கி கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. மகாமகக் குளக்கரையிலும், மகாமகக்குளத்தைச் சுற்றிலும் ஏராளமான பக்தர்கள் தீர்த்தவாரியைக் காணவும், புனித நீராடவும் வந்திருந்தனர்.
விடையாற்றிசைவக் கோயில்கள்6.3.2015 (வெள்ளிக்கிழமை, ஜய, மாசி 23) கும்பேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில்களில் விடையாற்றி சிறப்பாக நடைபெற்றது. வைணவக் கோயில்கள்6,7,8.3.2015 (வெள்ளி,சனி, ஞாயிறு ஜய, மாசி 23, 24,25) வராகப்பெருமாள் கோயிலில் விடையாற்றி விமரிசையாக நடைபெற்றது. குறிப்புகள்
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
தேரோட்டம் படத்தொகுப்பு
தீர்த்தவாரி படத்தொகுப்பு
|
Portal di Ensiklopedia Dunia