திருவிடைமருதூர்
இவ்வூரில் உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் புகழ்பெற்றது. இந்த ஊருக்கு அருச்சுனம் என்னும் பெயரும் உண்டு.[4] வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, நீடாமங்கலம் நீரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும். அமைவிடம்தஞ்சாவூரிலிருந்து 38.00 கி.மீ. தொலைவில் உள்ள திருவிடைமருதூர் பேரூராட்சிக்கு அருகில் கும்பகோணம் 9 கி.மீ.; மயிலாடுதுறை 27 கி.மீ.; ஜெயங்கொண்டம் 39 கி.மீ.; மன்னார்குடி 47 கி.மீ. தொலைவில் உள்ளன. பேரூராட்சியின் அமைப்பு12.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 91 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5] மக்கள் வகைப்பாடுஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,786 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 7,361 பேர் ஆண்கள், 7,425 பேர் பெண்கள் ஆவார்கள். திருவிடைமருதூர் மக்களின் சராசரி கல்வியறிவு 87.83 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.83%, பெண்களின் கல்வியறிவு 82.86% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. திருவிடைமருதூர் மக்கள் தொகையில் 10.02% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[6] அரசு அலுவலகங்கள்ரயில்வே ஸ்டேசன், துணை அஞ்சல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகமும், கிளைச்சிறையும், சார்பதிவாளர்அலுவலகமும், அரசுகருவூலம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் உள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கனரா வங்கி, போன்ற வங்கிகளும் உள்ளன. ஒன்றிய தலைநகரமாகவும், சட்டமன்ற தொகுதியாகவும் திகழ்கிறது. திருநீலக்குடி சப்தஸ்தானம்திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும்.[7] ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia