காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில்
காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் (மாகாளேசம்) என்றறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், இராகு-கேது பூஜித்த தலமும், இராகு - கேது பரிகார தலமுமாக அறியப்பட்ட இக்கோயில் குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1] இறைவர், வழிபட்டோர்
தல வரலாறுகாளத்தியில் மாகாளன் என்னும் பாம்பு வீடு பேற்றையடைய வேண்டி வழிபட்டுக்கொண்டிருந்தது. இறைவன் பணித்தமையால், அப்பாம்பு காஞ்சியை அடைந்து தன் பெயரில் சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து வழிபட்டு, மீண்டும் காளத்தியை அடைந்து வீடு பேற்றையடைந்ததென்பது தல வரலாறாகும்.[2] தல விளக்கம்மகாளேசம், மாகாளன் என்னும் பாம்பு திருக்காளத்தியில் பூசனை புரிந்து வீடு பேற்றை விரும்பப் பெருமான் கட்டளைப்படி காஞ்சியை அடைந்து சிவலிங்கம் நிறுவிப் போற்றி அருள்பெற்றுப் போய்த் திருக்காளத்தியில் முத்தியை எய்திற்று. இத்தலம் காமகோட்டத்திற்கும், காளிகோயிலுக்கும் இடையில் உள்ளது.[3] தல பதிகம்
அமைவிடம்இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரத்தின் நடுப்பகுதியில்காஞ்சி காமாட்சியம்மன் கோயிலின் மேற்கு இராசகோபுரம் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ கிலோமீட்டர் தொலைவிலுள்ள காளி கோட்டம் எனும் ஆதி காமாட்சி கோயிலுக்கு கிழக்கிலும், குமரகோட்டத்திற்கு வடகிழக்கிலும் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[5] இவற்றையும் காண்கமேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia