காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்)
காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) என்றறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேற்கு நோக்கிய சந்நிதியான இது; சித்திரப்பிரதிட்டை, பாதுகை பிரதிட்டையுடையதாகும். இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1] இறைவர், வழிபட்டோர்
தல வரலாறுகயிலையில் சிவபெருமான் வாமதேவ முனிவருக்கு கொடுத்தருளிய சிவலிங்கத்தை வாமதேவர் காஞ்சியில் பிரதிட்டை செய்து வழிபட்டார். வாமதேவ முனிவர் இறைவன் திருவருளினால் கயிலை அடைந்து, இறைவனை வணங்கி அவ்விறைவன் கொடுத்த ஓர் லிங்கத்தைப் பெற்று மீளவுங் காஞ்சியை அடைந்து பிறவாத்தானத்திற்கு மேற்கில் முக்தீசுவரர் என்னும் பெயரால் தாபித்து போற்றினார் என்பது வரலாறு.[2] தல பதிகம்
அமைவிடம்தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரத்தின் வடக்கு பகுதியான கம்மாளத் தெருவிலுள்ள காஞ்சி பிறவாதீசுவரர் கோயில் வளாகத்தில் மேற்கிலும், காஞ்சி இறவாதீசுவரர் கோயில் கிழக்கிலும் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் வடக்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சி மகாலிங்கேசுவரர் கோயிலின் வடமேற்கில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[4] இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia