காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில்
காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் (பருத்தீசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், சூரியன் (ஞாயிறு) பரிகார தலமாக உள்ள இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1] இறைவர், வழிபட்டோர்தல வரலாறுசூரியன் வழிபட்ட சிவலிங்க மூர்த்தமாகும். மேலும், இப்பகுதி பரிதிக்குளம் (பரிதி என்றால் ஞாயிறு, (சூரியன்) என்பதாகும்.) என்பது மருவி தற்போது பருத்திக்குளம் எனப்படுவதால் இவ்விரைவர்க்கு பருத்தீசுவரர் எனும் பெயருமுண்டு.[2] தல பதிகம்
அமைவிடம்தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் அரக்கோணம் செல்லும் சாலையின் அருகே பஞ்சுப்பேட்டை பெரியதெருவில் உள்ள தமிழக அரசின் விதைப் பண்ணையின் உட்புற வளாகத்திலுள்ள செவ்வந்தீசர் கோயிலை கடந்து சென்றால் இடதுபுறம் பிரியும் சாலைக்கருகில் பருத்திக்குளத்தின் கரையில் இச்சிவலிங்கம் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் தென்மேற்கில் சற்று தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[4] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia