குளத்துப்பாளையம்
குளத்துப்பாளையம் (ஆங்கிலம்:Kolathupalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரராட்சியில் கொளத்துப்பாளையம் மற்றும் ஆலாம்பாளையம் ஆகிய இரண்டு வருவாய் கிராமங்கள் உள்ளது. அமைவிடம்பேரூராட்சியிலிருந்து திருப்பூர் 60. கி.மீ.; கிழக்கில் மூலனூர் 14 கி.மீ.; மேற்கில் தாராபுரம் 6 கி.மீ.; வடக்கில் வெள்ளக்கோயில் 25 கி.மீ.; தெற்கில் பழநி 42 கி.மீ.., தொலைவில் உள்ளது. இப்பேருராட்சியின் கிழக்கு எல்லையாக மூலனூர் பேருராட்சியும் தெற்கு எல்லையாக தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னிவாடி, நல்லாம்பாளையம் மற்றும் மணக்கடவுவும், மேற்கு எல்லையாக தாராபுரம் நகராட்சியும், வடக்கு எல்லையாக தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீராட்சிமங்கலம் & அமராவதி ஆறும் உள்ளது. இப்பேருராட்சியில் அதிக அளவிலான அரிசி ஆலைகள் உள்ளது. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விதை நெல்கள் அனுப்பப்படுகிறது. பேரூராட்சியின் அமைப்பு38 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 77 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,457 வீடுகளும், 17,819 மக்கள்தொகையும் கொண்டது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia