மடத்துக்குளம்
மடத்துக்குளம் (ஆங்கிலம்:Madathukulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்திலுள்ள, மடத்துக்குளம் வட்டம் மற்றும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். முன்னர் மடத்துக்குளம் நகரம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. மடத்துக்குளம் வட்டம், 01.01.2010 அன்று, உடுமலைப்பேட்டை வட்டத்தின், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைக் கொண்டு புதிய வருவாய் வட்டமாக பிரிக்கப்பட்டது இங்கு முக்கியமான தொழிலாக விவசாயம் உள்ளது. இது அமராவதி ஆறு மூலம் பாசனம் நடைபெறும் பகுதி ஆகும். இந்த அமராவதி ஆறு அமராவதி அணைக்கட்டிலிருந்து உருவாகி மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், காரத்தொழுவு மற்றும் கடத்தூர் வழியாக தாராபுரம் செல்கிறது. அமைவிடம்மடத்துக்குளம்பேரூராட்சியிலிருந்து, திருப்பூர் 74 கி.மீ.; உடுமலைப்பேட்டை 13 கி.மீ.; பழநி 26; கொமாரலிங்கம் 7 கி.மீ.; தாராபுரம் 31கி.மீ.; கணியூர் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு9.48 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 100 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,761 வீடுகளும், 20,620 மக்கள்தொகையும் கொண்டது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia