அன்னூர்
![]() ![]() அன்னூர் (ஆங்கிலம்:Annur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அமைவிடம்அன்னூர் பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 34 கி.மீ., மேட்டுப்பாளையத்திலிருந்து 22 கி.மீ., அவிநாசியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது.[4] பேரூராட்சியின் அமைப்பு18.29 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 82 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 5,610 வீடுகளும், 20,079 மக்கள்தொகையும் கொண்டது.[6] [7] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 11°14′N 77°08′E / 11.23°N 77.13°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 338 மீட்டர் (1108 அடி) உயரத்தில் இருக்கின்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia