தம்தரி மாவட்டம்
புவிப்பரப்புஇந்த மாவட்டத்தில் மகாநதி பாய்கிறது. இந்த ஆற்றின் நீர்வளத்தையும், துணை ஆறுகளின் நீர்வளத்தைப் பயன்படுத்தியும் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர். பொருளாதாரம்இங்கு 136 அரிசி அரவை ஆலைகள் இயங்குகின்றன. [1] ரவிசங்கர் சாகர் அணையில் இருந்து பெறும் நீரை குடி நீராகப் பயன்படுத்துகின்றனர். அதைக் கொண்டு நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நிலப்பரப்பில் 52 சதவிகிதப் பகுதிகள் காட்டுப் பகுதியாக உள்ளன. [2] மக்கள் தொகை2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது 7,99,781 மக்கள் வாழ்ந்தனர். [3]சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 236 பேர் வாழ்கின்றனர். [3] சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. [3] இங்கு வாழ்பவர்களில் 78.95% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [3] சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia