நயா ராய்ப்பூர்
நவ ராய்ப்பூர் அடல் நகர் (Nava Raipur Atal Nagar), பொருள்: புதிய ராய்பூர் அடல் நகர் என்பது இந்திய மாநிலமான சத்தீஸ்கரின் வருங்காலத் தலைநகராகும். காந்திநகர், சண்டிகர், புவனேசுவர் ஆகிய திட்டமிடப்பட்ட தலைநகரங்கள் வரிசையில் இந்தியாவின் நான்காம் திட்டமிடப்பட்ட தலைநகர் நயா ராய்ப்பூர் அடல் நகர் ஆகும்.[1][2]முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் நினைவாக இப்புதிய பொலிவுறு நகரத்திற்கு முதன்முதலில் அடல் நகர் பெயரிடப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு இப்பெயரை சூலை 2019-இல் நவ ராய்ப்பூர் அடல் நகர் என மாற்றியது. [3] அமைவிடம்சத்தீஸ்கர் மாநிலத்தின், ராய்ப்பூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை-6க்கும் 43க்கும் இடையில் அமைந்துள்ள நவ ராய்ப்பூர் அடல் நகர், பழைய ராய்ப்பூரில் இருந்து தென்கிழக்கே 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுவாமி விவேகானந்தா விமானநிலையம் பழைய மற்றும் புதிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia