மலேசிய கடல்சார் காவல்துறை
மலேசிய கடல்சார் காவல்துறை (மலாய்: Agensi Penguatkuasaan Maritim Malaysia (APMM); ஆங்கிலம்: Malaysia Coast Guard; Malaysian Maritime Enforcement Agency) (MMEA); சீனம்: 马来西亚海事执法局) என்பது மலேசியாவின் கடல்சார் பகுதிகளில் சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கிய அரசு அமைப்பு; மலேசிய உள்துறை அமைச்சின் கீழ் இயங்குகிறது. இதன் தலைமையகம் புத்ராஜெயா கூட்டரசு நிர்வாக மையத்தில் உள்ளது. [3] இந்தத் துறை, மலேசிய கடல்சார் மண்டலம் மற்றும் கடல் பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது; நாட்டின் அவசரகாலநிலை, குறிப்பிடத்தக்க நெருக்கடிகள் அல்லது போர்க்காலம்; ஆகியவற்றின் போது மலேசிய ஆயுதப்படைகளின் கீழ் ஒருங்கிணைக்கப்படலாம்.[4] இந்தத் துறை, ஐக்கிய அமெரிக்காவின் கடலோர காவல்படை (United States Coast Guard)[5] மற்றும் சப்பான் கடலோர காவல்படை (Japan Coast Guard) ஆகியவற்றுடன் நெருங்கிய உறவைப் பேணுகிறது.[6][7] வரலாறு![]() மலேசிய கடல்சார் காவல் துறையின் வரலாறு, 21 ஏப்ரல் 1999 அன்று, மலேசிய தேசிய பாதுகாப்பு மன்றத்தில் (National Security Council of Malaysia), மலேசியப் பிரதமர் துறையால் நடத்தப்பட்ட ஒரு சந்திப்பு நிகழ்வின் மூலமாகத் தொடங்குகிறது. அன்றைய தினம், மலேசிய கடலோர காவல்படையை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் எனும் ஆய்வு அறிக்கை அந்த நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்டது.[8] 16 ஏப்ரல் 2003-இல் அறிக்கையின் முடிவுகளை மலேசிய அமைச்சரவை ஏற்றுக் கொண்டது. டத்தோ அபு தாலிப் அஜி அருன் என்பவரின் தலைமையில், மலேசிய கடல்சார் அமலாக்கத் துறையின் உருவாக்கத்தை ஒழுங்கமைக்கும் குழு உருவாக்கப்பட்டது. மலேசிய கடல்சார் அமலாக்கச் சட்டம்மே 2004-இல், மலேசிய நாடாளுமன்றத்தில் மலேசிய கடல்சார் அமலாக்கச் சட்டம் 2004 (சட்டம் 633) (Malaysian Maritime Enforcement Agency Act 2004) (Act 633) இயற்றப்பட்டது. அதன் வழி, மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை முறையாக நிறுவப்பட்டது. அந்தச் சட்டம் 25 சூன் 2004 அன்று; யாங் டி பெர்துவான் அகோங் அவர்களிடமிருந்து அரச ஒப்புதலைப் பெற்றது. அதே ஆண்டு சூலை 1 அன்று, மலேசிய அரசிதழில் வெளியிடப்பட்டது. 15 பிப்ரவரி 2005 அன்று, சட்டம் அமலுக்கு வந்தது. மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை10 அக்டோபர் 2005 அன்று, அப்போதைய துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் அவர்களால், மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை பொதுமக்களுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 30 நவம்பர் 2005 அன்று, மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை, தன் கப்பல்களின் வழி ரோந்துப் பணிகளைத் தொடங்கியது.[8] 21 மார்ச் 2006 அன்று, மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை, சிறப்புரிமை பெற்ற மலேசிய அரசாங்க நிறுவனங்களின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது. புதிய கப்பல்கள்28 ஏப்ரல் 2017 அன்று, மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை, பன்னாட்டு அடையாளத்திற்காக மலேசிய கடல்சார் காவல்துறை என முறைப்படி மறுபெயரிடப்பட்டது.[3] புதிய கப்பல்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. இருப்பினும், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் எனும் பெயர் பணி நோக்கங்களுக்காகத் தக்கவைக்கப்பட்டது.[3] மே 2018 இல், மலேசியாவில் புதிய அரசாங்கத்தின் கீழ், மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை; மலேசிய உள்துறை அமைச்சுடன் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது.[9] நவம்பர் 2018 இல், மலேசியாவின் வரவு செலவுத் திட்டம் 2019-இன் கீழ், அந்த முடிவு உறுதி செய்யப்பட்டது.[10] மலேசிய கடல்சார் மண்டலம்![]() ![]() உள்நாட்டு நீர்ப்பகுதி மற்றும் வட்டாரக் கடல் பகுதி
தொடர்ச்சி மண்டலம்
சிறப்பு பொருளாதார மண்டலம்
தரவரிசை அமைப்புஉயர் அதிகாரிகள்அதிகாரிகள் / வீரர்கள்மேலும் காண்க
மேற்கோள்கள்
இணையத்தளங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia