நந்தலாலா (கவிஞர்)

நந்தலாலா
Nandalala
பொதுக்குழு உறுப்பினர்,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
பதவியில்
? – 4 மார்ச்சு 2025
துணைத் தலைவர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
பதவியில்
25 சூன் 2018 – 4 மார்ச்சு 2025
Co-leading with
ச.செந்தில்நாதன்
நா. முத்துநிலவன்
ரோகிணி
ஆர். நீலா
மயிலை பாலு
பொதுச் செயலாளர்(கள்)ஆதவன் தீட்சண்யா (2018-)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1955-08-26)26 ஆகத்து 1955
குன்றாண்டார்கோவில், பழைய திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
மதராசு மாநிலம் (தற்போது புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு),
இந்தியா)
இறப்பு4 மார்ச்சு 2025(2025-03-04) (அகவை 69)
பெங்களூரு, கருநாடகம், இந்தியா
துணைவர்ஜெயந்​தி
பிள்ளைகள்பார​தி (மகள்)
நிவே​திதா (மகள்)
பெற்றோர்சிங்காரவேலு (தந்தை)
பணிகவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், இதழாளர், பாடலாசிரியர்

சிங்காரவேலு நெடுஞ்செழியன் எனும் இயற்பெயர் கொண்ட நந்தலாலா (Nandalala, (26 ஆகத்து[1] 1955[2] – 4 மார்ச் 2025) ஒரு தமிழ்நாட்டுக் கவிஞரும், பாடலாசிரியரும், பட்டிமன்றப் பேச்சாளரும், இதழாளருமாவார்.[3] தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலை​வ​ராக​வும், தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்​றப் பொதுக்​குழு உறுப்​பின​ராக​வும் பணியாற்றினார்.[4]

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாட்டின் இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த குன்றாண்டார்கோவில் எனும் ஊரில்[5] 26 ஆகத்து 1955 அன்று இந்திய இரயில்வே ஊழியரும் திராவிட இயக்கப் பற்றாளருமான சிங்காரவேலு என்பவருக்கு மகனாக நெடுஞ்செழியன் பிறந்தார்.[6][7]

இளம் அறிவியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு திருச்சிராப்பள்ளி நகரில் உள்ள பாரத மிகு மின் நிறுவன (BHEL) ஆலையில் பணியில் சேர்ந்த நந்தலாலா, பின்னர் இந்தியன் வங்கியில் பணியாற்றத் தொடங்கினார். தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டதால் பல ஊர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், செல்லுமிடமெல்லாம் இலக்கியப் பணியாற்றுவதற்கான வாய்ப்பாகவே அவர் எடுத்துக் கொண்டார்.[7]

திருச்சிராப்பள்ளியை அடுத்த கருமண்டபத்தில்[8] காணி நிலம் என்ற பெயரிலான இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.

இவருக்கு ஜெயந்​தி என்ற மனைவியும், பார​தி, நிவே​திதா ஆகிய மகள்​களும் உள்​ளனர்.[9]

செயல்பாடுகள்

சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக நந்தலாலா என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதினார். இவர் ஒருங்கிணைப்பாளராக 1990-களில் வழிநடத்திய சோலைக் குயில்கள் என்ற இதழ், மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது.[7][10][11]

இளைஞர்கள், குழந்தைகளிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாட்டு அரசு அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் நடத்திய புத்தகக் கண்காட்சிகளில் ஓர் ஊக்கமளிப்புப் பேச்சாளராகப் பங்கேற்றார். மதுக்கூர் இராமலிங்கத்துடன் இணைந்து திண்டுக்கல் ஐ. லியோனியின் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.[10]

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) தொடக்க காலம் முதல் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றிய அவர் அதன் திருச்சிராப்பள்ளி மாவட்டச் செயலாளராக நெடுங்காலம் பணியாற்றினார். வயல், களம், வானம் எனப் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் மைய அச்சாக விளங்கினார்.[7]

"வள்ளலார்" இராமலிங்க அடிகளின் இருநூறாம் ஆண்டு, வைக்கம் போராட்ட நூற்றாண்டு ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தியதில் பங்காற்றினார்.[10]

சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்து இவர் வழங்கிய 'ஓலை விசிறி' என்னும் நிகழ்ச்சியை திருச்சி வானொலியும் வானவில் பண்பலையும் தொடர்ந்து ஒலிபரப்பியது.[12]

படைப்புகள்

நூல்கள்

ஆண்டு தலைப்பு வகை பதிப்பகம் குறிப்பு
2002 நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி தொகுப்பு நூல் காவிரி பதிப்பகம்[13] (உடன் துணை ஆசிரியர்கள் - பைம்பொழில் மீரான்,

தி. மா.சரவணன் முதன்மை ஆசிரியர்- சு. முருகானந்தம் )

2022 திருச்சிராப்பள்ளி: ஊறும் வரலாறு[14] பயணக்குறிப்பு விகடன் பிரசுரம் திருச்சி மலைக்கோட்டை பற்றிய தகவல்கள், திருச்சியில் வேளாண்மை, சதங்கையின் ஜதிகளும் `சரிகமபதநி'யும் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன[15]

திரைப் பாடல்கள்

ஆண்டு திரைப்படம் பாடல்(கள்) பாடகர்(கள்) இசையமைப்பாளர் இயக்குநர்
1998 புதுமைப்பித்தன் நம்ம குப்பமெல்லாம் தேவா தேவா எஸ். கே. ஜீவா
உன்னை கண்டேன் சுவர்ணலதா
தலைமுறை வெள்ளிமணி தொட்டில் கட்ட இளையராஜா, அருண்மொழி, சுஜாதா இளையராஜா சரவண பாண்டியன்
1999 நினைவிருக்கும் வரை சந்தியா சந்தியா பி. உன்னிகிருஷ்ணன் தேவா கே. சுபாஷ்
கள்ளழகர் சின்ன வயசுலே கே. ஜே. யேசுதாஸ் தேவா கே. பாரதி
ஓ மணாளா எஸ். பி. பி. சரண், அனுராதா ஸ்ரீராம்
2000 உன்னை கொடு என்னை தருவேன் சொல்லு தலைவா ராஜேஷ் கிருஷ்ணன் எஸ். ஏ. ராஜ்குமார் கவி காளிதாஸ்
கண்ணுக்கு கண்ணாக துள்ளி துள்ளி மழைத்துளி சுஜாதா தேவா எஸ்.தயாளன்
2002 தயா கடவுளை பார்த்ததில்லை பரத்வாஜ் பரத்வாஜ் செந்தில்குமார்
2003 ஜெயம் காதல் தந்த வலி (?) கார்த்திக், கங்கா சித்தராசு இர. பி. பட்நாயக் மோ. ராஜா
கண்ணாமூச்சி ரே ரே (?) சங்கர் மகாதேவன்
வண்டி வண்டி இரயிலு (?) மாணிக்க விநாயகம், திப்பு
ஆளுக்கொரு ஆசை கந்தன் என்றால் அறிவு கார்த்திக் எஸ். ஏ. ராஜ்குமார் வி. சேகர்
2004 மானஸ்தன் ஆசை வைச்சேன் சுவர்ணலதா, ஸ்ரீநிவாஸ் கே. பாரதி
2006 சுதேசி கல்யாணக் கனவு பி. ஜெயச்சந்திரன், சுவர்ணலதா சிறீகாந்து தேவா ஜெப்பி ஏ. ஒய்
2008 தீக்குச்சி ? ஏ. எல். ராஜா
காதல் என்றால் என்ன காதல் என்றால் என்ன திப்பு, சிறீகாந்து (?) கே. பாரதி காளிமுத்து
மார்கழி தீமூட்டவா உண்ணிமேனன், அனுராதா ஸ்ரீராம்
திண்டுக்கல் சாரதி அம்மாடி ஆத்தாடி கைலாசு கேர், தினா தினா சிவ சண்முகம்
2011 முத்துக்கு முத்தாக என்னன்ற நீ என்னன்ற கிருஷ்ண ஐயர், முகேசு முகமது கவி பெரியதம்பி ராசு மதுரவன்
வணக்கம் ஸ்ரீராம், முகேசு முகமது, ஜனனி
போடிநாயக்கனூர் கணேசன் பூட்டி கெடந்த மனசு கார்த்திக், பிரியா ஜான் பீட்டர் ஓ. ஞானம்
வஞ்சிர மீன் கே. ஜி.ரஞ்சித், அனுராதா ஸ்ரீராம்
முரட்டு மச்சான் எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
கோலம் போட்ட வாசலில ஹரிசரண்
2014 ஆலமரம் கூத்து ரசிக்கும் கூட்டமே வணக்கம் அனிதா, சுபித்சா, வேல்முருகன், இராம்ஜீவன் எஸ். என். துரைசிங்
தேரேரி வராரு சாமியடி அனுராதா ஸ்ரீராம், சுபித்சா, விஜய் பிரகாஷ்,

இறப்பு

2025 சனவரி பிற்பகுதியில், இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பினால் கருநாடகத் தலைநகர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நந்தலாலா, சிகிச்சை பலனின்றி மார்ச்சு 4 அன்று காலையில் தனது 70-ஆம் அகவையில் காலமானார்.[11][16][17] தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[16] உள்ளிட்டோர் நந்தலாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.[17]

மார்ச்சு 5 அன்று காணி நிலம் இல்லத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்ட அவர் உடலுக்குத் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியலர்கள், நா. முத்துநிலவன், தங்கம் மூர்த்தி உள்ளிட்ட எழுத்தாளர்கள், மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினார்.[18]

மார்ச்சு 6 அன்று காலை 10 மணியளவில் காணி நிலம் இல்லத்தில் தமுஎகச தலைவர் ஆதவன் தீட்சண்யா, பேராசிரியர் அருணன், ச. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்பில் இரங்கல்.கூட்டம் நடைபெற்றது. அதன்பின் 11.30 மணிக்கு நந்தலாலாவின் உடல், காவிரி ஆற்றங்கரையிலுள்ள ஓயாமாரி நவீன மின் எரிமேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டு 12:15 மணிக்கு எரியூட்டப்பட்டது.[19]

மேற்கோள்கள்

  1. https://www.facebook.com/share/p/1AUGthVov9/. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. கவிஞர் மறைவு - எம்.பி நேரில் அஞ்சலி, retrieved 2025-03-07
  3. "வாழ்க்கை என்பது தன்னலம் சார்ந்ததல்ல; பிறர் நலம் சார்ந்தது: கவிஞர் நந்தலாலா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/2010/Sep/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-245048.html. பார்த்த நாள்: 4 March 2025. 
  4. "கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்". Hindu Tamil Thisai. 2025-03-05. Retrieved 2025-03-05.
  5. https://www.thehindu.com/news/national/tamil-nadu/poet-and-public-speaker-nandalala-no-more/article69289833.ece. {{cite web}}: Missing or empty |title= (help)
  6. J.Thaveethuraj (2025-03-04). "ஓய்வறியாது உழைத்த திருச்சியின் முகமாகத் திகழ்ந்த நந்தலாலா ! - Angusam News - Online News Portal about Tamilnadu" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-03-05.
  7. 7.0 7.1 7.2 7.3 "நந்தலாலா எனும் நல்ல தண்ணீர் ஊற்று! | அஞ்சலி: கவிஞர் நந்தலாலா". Hindu Tamil Thisai. 2025-03-09. Retrieved 2025-03-10.
  8. "கவிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான நந்தலாலா காலமானார்...! - Rockfort Times" (in அமெரிக்க ஆங்கிலம்). 2025-03-04. Retrieved 2025-03-08.
  9. DIN (2025-03-04). "கவிஞர் நந்தலாலா காலமானார்!". Dinamani. Retrieved 2025-03-05.
  10. 10.0 10.1 10.2 "Tamil poet Nandalala passes away". The Times of India.
  11. 11.0 11.1 Service, Express News (2025-03-05). "Poet, writer Nandalala passes away at 70; CM Stalin, leaders condole demise". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-03-08.
  12. எஸ்.கே.,தே.தீட்ஷித், அய்யனார் ராஜன்,பிரேம் குமார் (2025-03-04). "காலமானார் கவிஞர் நந்தலாலா - வசீகரப் பேச்சுக்கு தனி ரசிகர் கூட்டம் கொண்டவர்!". https://www.vikatan.com/. Retrieved 2025-03-08. {{cite web}}: External link in |website= (help)CS1 maint: multiple names: authors list (link)
  13. "நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி: Natantay Vali Tiruchirappalli (An Old and Rare Book inTamil) | Exotic India Art". www.exoticindiaart.com (in ஆங்கிலம்). Retrieved 2025-03-10.
  14. ஜீவகணேஷ்.ப (2022-09-16). "``இந்த புத்தகம் உங்கள் வீட்டிலிருந்தால், திருச்சியே உங்களிடமிருப்பதாக அர்த்தம்"- கவிஞர்.நந்தலாலா". https://www.vikatan.com/. Retrieved 2025-03-10. {{cite web}}: External link in |website= (help)
  15. WebDesk. "கவிஞர் நந்தலாலா மரணம்: ஸ்டாலின் இரங்கல்". tamil.indianexpress.com. Retrieved 2025-03-10.
  16. 16.0 16.1 "அந்தோ அருமை நண்பர் கவிஞர் நந்தலாலா மறைவு நமது வீர வணக்கம் - Viduthalai Daily Newspaper" (in அமெரிக்க ஆங்கிலம்). 2025-03-04. Retrieved 2025-03-08.
  17. 17.0 17.1 "கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்". Hindu Tamil Thisai. 2025-03-05. Retrieved 2025-03-08.
  18. "கவிஞர் நந்தலாலா உடலுக்கு துணை முதல்வர் நேரில் அஞ்சலி!". nakkheeran (in ஆங்கிலம்). 2025-03-05. Retrieved 2025-03-10.
  19. J.Thaveethuraj (2025-03-06). "விடை பெற்றார் கவிஞர் நந்தலாலா – காவிரி கரையோரம் உடல் தகனம் ! - Angusam News - Online News Portal about Tamilnadu" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-03-10.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya