பரதன் (இராமாயணம்)
பரதன் (Bharata) வால்மீகி இயற்றிய இராமாயணக் காவிய நாயகன் இராமரின் தம்பிமார்களில் ஒருவர். மற்றவர்கள் இலக்குவன், சத்துருக்கனன் ஆவார். வட இந்தியாவில் உள்ள கோசல நாட்டு மன்னர் தசரதன் - கைகேயி இணையருக்குப் பிறந்தவர் பரதன். [2][3] பரதன் சீதையின் தங்கை மாண்டவியை மணந்தவர். பரதன் - மாண்டவி இணையருக்குப் பிறந்த குழந்தைகள் தக்சன் மற்றும் புஷ்கலன் ஆவர். தற்கால பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் தக்சன் தக்சசீலா நகரத்தையும், புஷ்கலன் புஷ்கலாவதி எனும் நகரத்தையும் நிறுவினர். இராமாயணத்தில் பரதனின் பங்கு![]() ![]() தசரதனிடத்தில் கைகேயி பெற்ற வரத்தின்படி, இராமர் சீதை மற்றும் இலக்குவனுடன் 14 ஆண்டுகள் வனவாசம் புரிகையில், அயோத்தி நகரத்தின் வெளிப்புறத்தில் நந்தி கிராமம் எனுமிடத்தில், இராமரின் பாதுகைகளை வழிப்பட்டு, துறவிக் கோலத்தில் கோசல நாட்டை பரதன் ஆண்டார்.[4] தமிழ்நாட்டில் வைணவர்கள் பரதனைப் பரதாழ்வார் என்று சிறப்புடன் அழைக்கப்படுவார். இதனையும் காண்கமேற்கோள்கள்
இதனையும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia