பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் என்பது பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட பதவி ஆகும். தேசிய செயற்குழு மற்றும் மாநிலங்களின் செயற்குழு உறுப்பினர்களால் தேசியத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். பொதுவாக தேசியத் தலைவரை கட்சியின் மூத்த தலைவர்களின் ஆசியுடன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேசியத் தலைவர் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும். கட்சி விதிகளின்படி ஒருவரை தொடர்ந்து இருமுறைக்கு மேல் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது.[1] கட்சியின் தேசியத் தலைவர் பிரதமர் பதவி அல்லது மத்திய அமைச்சர் போன்ற அரசுப் பதவிகளை ஏற்க இயலாது. அவ்வாறு அரசுப் பதவியை ஏற்க வேண்டுமானால் கட்சிப் பதவியை துறக்க வேண்டும்.[2] தேசியத் தலைவராக ஒருவர் தேர்தெடுக்கப்பட வேண்டும் எனில் குறைந்த பட்சம் தொடர்ந்து 15 ஆண்டுகள் கட்சி உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.[1]
1986இல் வாஜ்பாய்க்குப் பின்னர் கட்சியின் இரண்டாவது தேசியத் தலைவராக அத்வானி தேர்வு செய்யப்பட்டார். இவர் 3 முறை தேசியத் தலைவர் வகித்தார். 1990-ஆம் ஆண்டில் அத்வானி நடத்திய ரத யாத்திரைக்காக இந்தியா முழுவதும் அறியப்பட்டார். வாஜ்பாய் அமைச்சரவையில் அத்வானி துணைப்பிரதமராக 2002 முதல் 2004 வரை பதவி வகித்தார்.
இவர் 1991இல் பாஜக தேசியத் தலைவராவதற்கு முன்னர் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கதில் 50 ஆண்டுகள் செயலாற்றியவர். இவர் ராம ஜென்ம பூமி இயக்கதிற்கு லால் கிருஷ்ண அத்வானியுடன் பாடுபட்டவர். இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சராக பணியாற்றியவர். இவர் தேசியத் தலைவராக இருந்த போது, முதல் முறையாக நாடாளுமன்றத்தில் பாஜக பெரிய எதிகட்சியாக விளங்கியது.
பாஜக தேசியத் தலைவராவதற்கு முன்னர் அத்வானி ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கதில் 50 ஆண்டுகள் செயலாற்றியவர். இவர் இரண்டாவது முறையாக தேசியத் தலைவர் பதவி விகித்தார். 1996 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெற்று, அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. 1999ல் வெற்றி பெற்ற பின் 2002ல் துணை பிரதமர் ஆனார்.
பங்காரு லெட்சுமண் பதவி விலகலுக்குப் பின்னர் ஜெனா கிருஷ்ணமூர்த்தி தேசியத் தலைவரானார். ஒராண்டுக் பின்னர் இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றதால் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
மூன்றாவது முறையாக அத்வானின் தேசியத் தலைவராக பதவியேற்றார். மேலும் நாடாளுமன்ற மக்களவை எதிர்கட்சி தலைவராகவும் செயல்பட்டார். 2005இல் இவர் முகமது அலி ஜின்னாவை புகழ்ந்து பேசியதால் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.
2005இல் ராஜ்நாத் சிங் பாஜகவின் தேசியத் தலைவராக பதவியேற்றார். 2006-இல் மீண்டும் தேசியத் தலைவராக பொறுப்பேற்றார். இவர் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சராகவும் பணியாற்றியவர். இவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவராகவும் இருந்தவர். இவர் 2009இல் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கதில் நீண்ட கால உறுப்பினரான நிதின் கட்காரி 2009-இல் இளம் தேசியத் தலைவராக பொறுப்பேற்றார். இவர் மகாராஷ்டிர மாநில பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தவர். இவர் 2013-இல் தேசியத் தலைவர் பதவிலிருந்து விலகினார்.
2013-இல் இரண்டாவது முறையாக ராஜ்நாத் சிங் தேசியத் தலைவராக பதவியேற்றார். 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு கடுமையாக உழைத்தவர். மேலும் இவர் நரேந்திர மோதியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்க காரணமானவர். 2014 மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி ஆட்சி அமைத்ததால், ராஜ்நாத் சிங் மத்திய் அமைச்சரானர். எனவே கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
அமித் சா கட்சியின் தேசியத் தலைவராக 2014இல் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் மோதியின் முதலாம் அமைச்சரவையில் அமித் சா உள்துறை அமைச்சராக பதவியேற்றார். இவர் தொடர்ந்து இரு முறை கட்சியின் தேசியத் தலைவராக பதவி வகித்தார்.
ஆர் எஸ் எஸ் அமைப்பின் நீண்ட கால உறுப்பின்ரான ஜெகத் பிரகாஷ் நட்டா 2020-இல் கட்சியின் தேசியத் தலைவரானார். இவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவராக பதவியில் இருந்தவர். மேலும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும், பிரேம் குமார் துமால் அமைச்சரவையில் 1998 - 2003 ஆண்டுகளில் அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.