பிம்பிரி-சிஞ்ச்வடு
பிம்ப்ரி-சிஞ்ச்வடு எனும் நகரம் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிராவில் உள்ள புனே மாவட்டம், ஹவேலி தாலுகாவில் உள்ள பெருநகர மாநகராட்சியாகும். இது புனேயின் இரட்டை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்திற்குள் பிம்பிரி, சிஞ்ச்வடு, நிக்டி, போசரி, மோஷி, சாங்கவி ஆகிய ஊர்களும் அடங்குகின்றன. இது புனேயின் வடமேற்கில் அமைந்துள்ளது. இங்கிருந்து புனேவுக்கு பழைய புனே-மும்பை நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். மக்கள் தொகை2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது[1] 1,729,320 மக்கள் வாழ்ந்தனர். இவர்களில் எழுத்தறிவு பெற்றோர் 87.19 சதவீதத்தினர் ஆவர். இங்கு வாழும் மக்கள் மராத்தியில் பேசுகின்றனர். பண்பாடுவிநாயக சதுர்த்தியும், தசராவும் கொண்டாடுகின்றனர். போக்குவரத்துபிம்ப்ரி-சிஞ்ச்வடு நகரத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு தொடருந்தி, பேருந்து, வானூர்தி மூலம் செல்லலாம். இதற்கு அருகில் புனே சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. புனே - லோணாவ்ளா புறநகர் ரயில்கள் இந்த நகரத்தைக் கடந்து செல்கின்றன. பழைய புனே -மும்பை நெடுஞ்சாலை வழியாக மற்ற ஊர்களுக்குச் செல்லலாம். பிம்ப்ரி-சிஞ்ச்வடு பேருந்து நிலையத்தில் இருந்து மற்ற ஊர்களுக்கு புனே மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கு அருகில் சிஞ்ச்வடு ரயில் நிலையம், அகுர்டி ரயில் நிலையம், பிம்பிரி ரயில் நிலையம். புறநகர்ப் பகுதிகள்இந்த நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை கீழே காணவும்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia