மல்லசமுத்திரம்
மல்லசமுத்திரம் (ஆங்கிலம்:Mallasamudram), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இவ்வூரில் உள்ளது. இப்பேரூராட்சியில் துண்டு, கைலிகள் உற்பத்தி செய்யப்பட்டும், விவசாயம் செய்யப்பட்டும் வருகிறது.[சான்று தேவை] அமைவிடம்மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு கிழக்கில் நாமக்கல் 40 கி.மீ.; மேற்கில் ஈரோடு 36 கி.மீ.; வடக்கில் சேலம் 26 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு5.63 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 18 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3] மக்கள் தொகை பரம்பல்2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,895 வீடுகளும், 18,007 மக்கள்தொகையும் கொண்டது.[4] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 11°29′N 78°02′E / 11.48°N 78.03°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 224 மீட்டர் (734 அடி) உயரத்தில் இருக்கின்றது. கோவில்கள்இதன் அருகில் காளிபட்டி கந்தசாமி கோயில் உள்ளது.[சான்று தேவை] தைப்பூசம் மிகவும் புகழ் பெற்ற திருவிழா ஆகும். பெயர்க்காரணம்மல்லர்கள் (பல்லவர்கள்) 2 ஆம் புலிகேசி மீது படையெடுத்து செல்லும்போது அந்த சின்ன ஊரை கடக்க நேரிட்டது, இருபுறமும் கடல் போல் தோற்றமளித்த ஏரியையும் மறுபுறம் ஓடிய பொன்னி நதியையும் பார்த்து அழகான ஊருக்கு "மல்லர்களின் சமுத்திரம்" என்று பெயரிட்டனர். நாளடைவில் மல்லசமுத்திரம் என்று அழைக்கப்படலாயிற்று.[சான்று தேவை] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia