ஆலம்பாளையம்
ஆலாம்பாளையம் (ஆங்கிலம்:Alampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி ஈரோடு மாநகராட்சியின் மேற்கு புறத்தில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பேரூராட்சியின் வட்டாரத்தில் சேஷசாயி காகித ஆலை நிறுவனமும் [3], காவேரி ரயில் நிலையமும்[4] உள்ளது. இப்பேரூராட்சியின் பெரும்பான்மையான தொழிலாக கருதப்படுவது விவசாயமும், நெசவும் ஆகும் அமைவிடம்ஆலம்பாளையம் பேரூராட்சி, திருச்செங்கோடு - ஈரோடு செல்லும் சாலையில், நாமக்கல்லிருந்து 48 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் திருச்செங்கோடு 15 கி.மீ.; மேற்கில் ஈரோடு 7 கி.மீ.; வடக்கில் பரமத்தி-வேலூர் 45 கி.மீ.; தெற்கில் குமாரபாளையம் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு10.32 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி குமாரபாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,785 வீடுகளும், 20,286 மக்கள்தொகையும் கொண்டது.[6] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia