குமாரபாளையம்
குமாரபாளையம் (Kumarapalayam), பொதுவழக்கில் கொமாரபாளையம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தின் குமாரபாளையம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், முதல் நிலை நகராட்சி ஆகும். குமாரபாளையம் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. வரலாறு1978இல் பேரூராட்சியாக இருந்தது மூன்றாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது, பின் 1984இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது, 1990இல் இருந்து முதல் நிலை நகராட்சியாக செயல்படுகிறது. அமைவிடம்இது காவிரி ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. காவிரியின் மேற்கு புறம் ஈரோடு மாவட்டம் அமைந்துள்ளது. இது ஈரோடு மாநகராட்சி எல்லையை ஒட்டி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரமாகும். ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 14கி.மீ தொலைவிலும் ஈரோடு சந்திப்பிலிருந்து சுமார் 15கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஊத்தங்கரையில் இருந்து 148km தொலைவிலும் அமைந்துள்ளது . ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரம் விசைத்தறி கூடங்களுக்கு பெயர் பெற்றது, அதை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். தேசிய நெடுஞ்சாலை 544 இதன் வழியாக செல்கிறது. இங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பவானி நகரம் (கூடுதுறை) அமைந்துள்ளது . மக்கள் வகைப்பாடுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,640 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குமரபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குமாரபாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 65% கைலிகள் ஏற்றுமதி இங்கிருந்து அரபு நாடுகளுக்கு செய்யப்படுகிறது. பலதரப்பட்ட மக்கள் இங்கே வசிக்கின்றனர். இங்கு தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பரவலாக பேசப்படுகின்றன. முக்கியத்தொழில்ஈரோட்டிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது குமாரபாளையம். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் இங்கிருந்து தான் கைலி (அ) லுங்கி (அ) வேட்டி ஏற்றுமதியாகிறது. இங்கு தயாராகும் கைலிகள் அதிக தரமானவை. குமாரபாளையமும் அதற்குப் பக்கத்திலுள்ள பள்ளிப்பாளையமும் விசைத்தறி மூலம் கைலிகள் தயாரிப்பதில் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளன. கைலிகளின் தரத்தை நூல், எடையை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக, ஒரு மீட்டர் துணியின் எடை 90-120 கிராம் வரை இருக்கும். 1975-க்குப் பிறகு தமிழகத்தில் காட்டன் கைலிகள் பரவலாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்ததிலிருந்தே இங்கு உற்பத்திகள் தொடங்கபட்டன. இங்கு சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர். கைலிகள் புழக்கத்தில் வந்த காலகட்டத்தில், கைலியில் கஞ்சியை ஊற்றி நூலை உறுதியாக்கும் முறை குமாரபாளையத்தில் உள்ளது. இதில் ஒரு மீட்டர் 120 கிராம் எடை கொண்ட துணியில் நெய்யப்படுவதுதான் முதல் தரமான கைலி. கைலிகள் தவிர, தளபதி வேட்டி என்று அழைக்கப்படும் வேஷ்டிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகை வேஷ்டிகள் கேரளாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதை தயாரிப்பதற்கென்றே பல விசைத்தறிக் கூடங்கள் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக காவி நிறத்தில் தயாராகும் தளபதி வேஷ்டிகள்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை தவிர, கைக்குட்டைகளும், டிஸ்கோ துண்டுகளும் இங்கு தயாராகின்றன. இதனை கிலோ கணக்கில் எடையிட்டு விற்கிறார்கள். சுற்றுலாத் தலங்கள்![]() இதன் எல்லையாக உள்ள பவானி, காவிரி ஆறு, மதகு அணைகள், சுற்றி உள்ள கிராமங்கள் என பலவகை இயற்கை அழகைக் கொண்டு மிளிருகிறது. ![]() சுற்றுலாவிற்கு உகந்த இடங்கள்
திருவிழாக்கள்இங்கே ஆலய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் காளியம்மன், மாரியம்மன் பண்டிகைகள் ஊர் முழுவதும் திருவிழாகோலம் பூண்டு சிறப்பாக கொண்டாடப்படும்.ஆடி மாதம் வருகிற ஆடி பெருக்கு விழாவில் காவிரி நதியில் நீராடி கோவிலுக்கு சென்று வழிபட்டு வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படும்.
சுற்றுலாவிற்கு அருகில் உள்ள ஏனைய இடங்கள்
2011 உள்ளாட்சித் தேர்தல்மொத்தம் 33 வார்டுகளை உள்ளடக்கியது,இதில் 2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி சாரா வேட்பாளராக நின்ற கி. தனசேகரன் வெற்றி பெற்று நகராட்சி தலைவரானார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்குமாரபாளையம் நகராட்சி இணையதளம் பரணிடப்பட்டது 2011-04-11 at the வந்தவழி இயந்திரம் |
Portal di Ensiklopedia Dunia