வியாகுலத் தாய்மரி (தொடர்பாடல்)![]() வியாகுலத் தாய்மரி அல்லது வியாகுலச் சங்கீதம் என்னும் பாடல் தூய மரியாவின் துயரங்களின் நினைவாகப் கத்தோலிக்க திருச்சபையில் பாடப்படும் பாடலாகும். இது 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம். இதன் ஆசிரியர் பிரான்சிஸ்கன் சபையினைச் சேர்ந்த ஜெகொபின் த டோடி அல்லது திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டாகவோ இருக்கலாம்.[1][2][3] கிறிஸ்துவின் பாடுகளின் போது மரியாள் பட்ட துன்பங்களை நினைவுகூறும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது. 1388-இல் இப்பாடல் வியாகுல அன்னை நவநாளில் பயன் படுத்தப்பட்டதாக ஜார்ஜுஸ் ஸ்டெல்லா என்பவர் எழுதியுள்ளார்.[4][5] இப்பாடல் திருப்பலியில் தொடர்பாடலாக பாடப்படுவதை திரெந்து பொதுச்சங்கம் நீக்கியது. எனினும் திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்டால் இது தூய மரியாவின் துயரங்களின் நினைவு நாளான செப்டம்பர் 15 அன்று பாடப்பட அனுமதிக்கப்பட்டது.[6] பாடல்கீழ்வரும் மொழிபெயர்ப்பு கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாகும். இது கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி வாசக நூலிலிருந்து எடுக்கப்பட்டது. இது வார்த்தைக்கு வார்த்தை செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு அல்ல. மாறாக பொருள் மாறாவண்ணம், தமிழ் கவிதை நடைக்கு ஒப்ப பெயர்க்கப்பட்டது ஆகும்.
இசைஇப்படலின் ஆங்கில மற்றும் இலத்தீன் வரிகளுக்கு ஆன்டோனியோ விவால்டி, பிராண்ஸ் சூபேர்ட், ஜூசெப்பே வேர்டி, எபிகா இசைக்குழு, ஜோசப் ஹேடன், அன்டனின் டுவோராக் முதலிய பலர் இசையமைத்துள்ளனர். ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia