இயேசுவின் தாயான தூய மரியா பல பெயர்களால் கிறித்தவர்களிடையே அறியப்படுகின்றார். இப்பெயர்களுள் பட்டங்கள் (ஆசி பெற்றவர், கன்னி, அன்னை), அடைமொழிகள் (விடியற்காலத்தின் விண்மீன், கடலின் விண்மீன் (Star of the Sea), விண் அரசி, எங்கள் மகிழ்ச்சியின் காரணம்), காரியப் பெயர்கள்(கடவுளை ஏந்துபவர் (Theotokos), முற்றிலும் தூயவர் (Panagia), இரக்கத்தின் அன்னை) மற்றும் அரோக்கிய அன்னை முதலிய பிற பெயர்களும் அடங்கும்.
இப்பெயர்கள் அனைத்தும் இயேசுவின் தாயான தூய மரியா என்னும் ஒரு நபரையே குறிக்கும். இப்பெயர்கள் புனிதர்களின் உறவு நிலையினை ஏற்கும் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கத்திய மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம் முதலிய பல சபைகளில் பயன்படுத்தப்படுகின்றன. மரியாவின் இப்பெயர்கள் ஏதேனும் இறையியட்கோட்பாடுகளின் பேரில் அமைந்திருக்கும். எனினும் பல பெயர்கள் கவிதை நடைக்காவவும் பயன்படுகின்றது. கலை வரலாற்றில் சித்தரிக்கப்பட்டிடுக்கும் வகையினைக்கொண்டும் மரியாவுக்கு பல பெயர்கள் உள்ளன.
கிறிஸ்தியல் தாக்கங்கள் உடைய இப்பெயர் கிழக்கு கிறித்தவ திருச்சபைகளின் மிகவும் பயன்படுத்தப்படுகின்றது. முதலாம் எபேசு சங்கம் இப்பெயரினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஒரு அரசியின் உடையில் வானதூதர் புடைசூழ மரியா தனது பக்தர்களைக்காப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளார்; முதல் 13 நூற்றாண்டின் பிற்பகுதியில் மத்திய ஐரோப்பா மற்றும் இத்தாலியில் எழுந்த சித்திர வகை;[10]
இயேசு சிலுவையில் மரித்தப்பின்னர் மரியாள் கிறிஸ்துவின் உடலை மடியில் ஏந்தியவாறு; இந்த வகை சித்தரிப்பு ஜெர்மனியில் 13 ஆம் நூற்றாண்டில் முதலில் உருவானது;[11]
Mater Amabilis
"அன்பு நிரை அன்னை"
பொதுவாக, "அன்னையும் குழந்தையும்" என இப்படம் அறியப்படுகின்றது
பொதுவாக மேற்கத்திய பகுதிகளில் கன்னிமரியாவின் சித்தரிப்பு;
மேற்கோள்கள்
↑"...Byzantine inscriptions from Palestine...in the sixth [century]....fourteen inscriptions invoke "Holy Mary" (Hagia Maria), eleven more hail her as Theotokos; others add the attribution of "Immaculate" (Akeratos), "Most Blessed" (Kecharitomene), "Mistress" (Despoina), "Virgin" or "Ever-Virgin" (Aei-Parthenos)." (Frend 1984, p. 836)
↑இரனேயு (Adversus Haereses 5.19.1]): "And if the former did disobey God, yet the latter was persuaded to be obedient to God, in order that the Virgin Mary might become the patroness (advocata) of the virgin Eve. And thus, as the human race fell into bondage to death by means of a virgin, so is it rescued by a virgin; virginal disobedience having been balanced in the opposite scale by virginal obedience."