பெந்தக்கோஸ்து
பெந்தக்கோஸ்து (பண்டைக் கிரேக்கம்: Πεντηκοστή [ἡμέρα], Pentēkostē [hēmera]) என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழாவான பாஸ்காத் திருவிழாவுக்குப்பின் ஐம்பதாவது நாள் கொண்டாடப்பட்டது. பின்னாட்களில் கிறித்தவர்களின் திருவழிபாட்டு ஆண்டில், திருத்தூதர்களின் மீதும், கிறித்துவின் சீடர்கள் மீதும் (மொத்தம் 120 நபர்கள்[1]) தூய ஆவியின் வருகையினை நினைவு கூறும் விதமாக தூய ஆவி பெருவிழா என்னும் பெயரில் அமைந்தது. இவ்விழாவே திருச்சபையின் பிறந்த நாளாகக் கருதப்படுகின்றது.[2] விண்ணேற்ற விழாவுக்குப் பின் 10ஆம் நாளில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது. பெந்தக்கோஸ்து சபை இப்புதிய ஏற்பாட்டு நிகழ்விலிருந்தே தனது பெயரைப் பெறுகின்றது. கத்தோலிக்க திருச்சபையில், தூய ஆவியின் வருகை நிகழ்வு செபமாலையின் மகிமை மறைபொருள்களின் மூன்றாம் மறைபொருள் ஆகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia