5 நயா பைசா (இந்திய நாணயம்)
ஐந்து நயா பைசா (five naye paise (Hindi: पाँच नए पैसे) என்பது ஒரு நாணய அலகாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 1⁄20 ஆகும். பைசாவின் சின்னம் p. வரலாறு1957 க்கு முன்னர், இந்திய ரூபாய் தசமபடுத்தப்படாமல் இருந்தது, 1835 முதல் 1957 வரை ரூபாய் ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணாவும் நான்கு இந்திய பைசாக்களாகவும், ஒவ்வொரு பைசாக்களும் மூன்று தம்பிடிகளாக இருந்தன 1947 இல் தம்பிடிக் காசு செல்லாததாக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டில், இந்திய "நாணயல்களை மெட்ரிக் முறைமையைப் பின்பற்றி சீர்திருத்த " இந்திய நாணயச் சட்டம்" திருத்தப்பட்டது. அதன்படி பைசா நாணயங்கள் 1957 இல் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் 1957 முதல் 1964 வரை நாணயமானது "நயா பைசா" (English: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று இதிலுள்ள, "நயா" என்ற வார்த்தை கைவிடப்பட்டது மேலும் அந்த பெயரானது "பைசா" என அழைக்கப்பட்டது. நயா பைசா நாணயங்கள் "பதின் வரிசை"யின் ஒரு பகுதியாக இருந்தது.[1][2][3] காசு அச்சடிப்பு1957 முதல் 1963 வரை பம்பாயில் (இன்றைய மும்பை) இந்திய அரசு காசாலையில் ஐந்து நயா பைசா நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. அதன் சிறிய அடையாளச் சின்னமாக ♦ (சிறிய புள்ளி / வைரம்) வைக்கப்பட்டது.[4] மொத்த காசுகள்மொத்தம் 4,294,967,295 நாணயங்கள் 1957 முதல் 1963 முடிய அச்சிடப்பட்டன. உலோகம்ஐந்து நயா பைசா நாணயங்கள் செம்புநிக்கல் கலப்பு உலோகத்தில் தயாரிக்கப்பட்டன. காசின் எடை 4.0 கிராம்கள், விட்டம் 22 மில்லிமீட்டர்கள் (0.87 அங்), கனம் 1.67 மில்லிமீட்டர்கள் (0.066 அங்). ஐந்து நயா பைசாவானது முனை மழுங்கிய சதுரவடிவில் அமைந்திருந்தது. வகைகள்
மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia