இந்திய ஒரு ரூபாய் தாள்
![]() இந்திய ஒரு ரூபாய் பணத்தாள் (Indian 1-rupee note) என்பது நூறு பைசாக்களை உள்ளடக்கியது. தற்போது இந்திய அரசால் வெளியிடப்பட்ட, புழக்கத்தில் உள்ள மிகச்சிறிய இந்திய ரூபாய் நோட்டு ஆகும். புழக்கத்தில் உள்ள மற்ற அனைத்து நோட்டுகளும் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படுகின்றன. ஒரு ரூபாய் தாள் நிதிச் செயலாளரின் கையொப்பத்தைக் கொண்டது. மற்ற பணத்தாள்களைப் போல ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கையெழுத்து இடம்பெறுவதில்லை.[1] வரலாறுஒரு ரூபாய் பணத்தாளானது முதன்முதலில் 1917 நவம்பர் 30 அன்று இங்கிலாந்தில் அச்சடிக்கப்பட்டு, இந்தியாவில் புழக்கத்திற்கு வந்தது ஆகும். இந்த நோட்டின் மீது இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் தலை முத்திரையிடப்பட்டிருந்தது. பிரித்தானிய இந்தியப் பேரரசில் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயங்கள் வெள்ளி நாணயங்களாக வெளியிடப்பட்டன. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் காரணமாக, வெள்ளிக்கு பற்றாக்குறை இருந்தது. இதனால் இந்த கால கட்டத்தில் வெள்ளி நாணயங்களுடன் ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்பட்டன. இதுவரை 44 முறை ஒரு ரூபாய் தாளின் நிறம், அளவு, அடையாளங்கள் ஆகியவற்றை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றி உள்ளது.[2] இந்திய ஒரு ரூபாய் தாள்1949-19501951மொழிகள்ஒரு ரூபாய் தாளில் மற்ற இந்திய ரூபாய் ரூபாய் நோட்டுகளைப் போலவே ஒரு ரூபாய் என்பது 17 மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மதிப்பு எழுதப்பட்டுள்ளது. பின் பக்கத்தில் ஒரு மொழி குழு உள்ளது, இது இந்தியாவின் 22 உத்தியோகபூர்வ மொழிகளில் 15 மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொழிகள் அகர வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மொழிகள் குழுவில் சேர்க்கப்பட்டுள்ள மொழிகள் அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீர், கொங்கனி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மற்றும் உருது .
படங்கள்
மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia